தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(7) |
பாவாணர் உரைநடையில் காணப்படும் உவமைச் சிறப்புக்கு ஓர் எடுத்துக் காட்டுத் தருக. |
“தமிழ் இயல்பாகவே செம்மையுடைமையின், தமிழ் எனினும் செந்தமிழ் எனினும் ஒன்றே. தமிழின் திரிபாகிய கொடுந்தமிழினின்றும் பிரித்துக் கூறவே செந்தமிழ் எனப்பட்டது. இயல்பான பால், தண்ணீர்ப் பாலினின்றும் பிரித்துக் கூறத் தனிப்பால் எனப்பட்டாற் போல.” இந்த உவமையின் நயத்தைக் கண்டு வியக்கலாம். |