தன்மதிப்பீடு : விடைகள் - II

(2)

பாவாணர் சொல்லாக்கத்தில் ஈடுபடக் காரணங்களைக்
கூறுக.

    பாவாணர் சொல்லாக்கத்தில் ஈடுபட இரு
காரணங்கள்.
 
(1) தமிழர்களின்     எழுத்திலும்     பேச்சிலும்
கலந்துவிட்ட வடசொற்களை நீக்க வேண்டும்.
அவ்வாறு நீக்கிய பின் அவற்றிற்கு இணையான
தமிழ்ச் சொற்களை அமைத்தல் வேண்டும். அந்த
வடசொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்
முன்னரே தமிழில் இல்லாவிடத்துப் புதுச்
சொற்களை உருவாக்கும் தேவை எழுகிறது.
(2) ஆங்கில நூல்களில்     இருந்து புதிய
கருத்தாக்கங்களைத் தமிழில் எழுதும்போது புதிய
தமிழ்ச் சொற்களை உருவாக்கும் தேவை
எழுகிறது.

முன்