1) |
திவ்வியம் என்றால் என்ன என்பது பற்றியும்
பிரபந்தம்
என்பதன் சொற்பொருள் பற்றியும் அறிந்து இருப்பீர்கள். |
2) |
ஆழ்வார் என்பதற்குக் கூறப்படும் விளக்கங்களை
அறிந்து இருப்பீர்கள். |
3) |
நாதமுனிகள், திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்த
முறை - இயல், இசை, நாடகம் என்னும் தமிழ்
மரபோடு
பொருந்தி வருவதைப் புரிந்து
கொண்டிருப்பீர்கள். |
4) |
மேலும் முன்னைய தமிழ்மரபுகள் சிலவற்றை
உள்வாங்கிக் கொண்டு அவர் திவ்வியப் பிரபந்தத்தைத்
தொகுத்திருப்பதையும் அறிந்து இருப்பீர்கள். |
5) |
ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களின் எண்ணிக்கை,
பாசுரங்களின் எண்ணிக்கை, திருக்கோயில்களில்
திவ்வியப்பிரபந்தத்துக்கு உள்ள முதன்மை, திராவிட
வேதம் என்னும் சிறப்பு முதலியன பற்றியும் விரிவாக
உணர்ந்து இருப்பீர்கள். |