4.2 பிரபத்தி | ||||||||
நாம் இதுவரை பார்த்த கர்ம,
ஞான, பக்தி யோகங்களுக்குச் சில நியமங்கள் (கட்டுப்பாடுகள்) வேண்டியிருத்தலின் அவை செய்வதற்கு அரியனவாம். பிரபத்தி யோகமே எல்லோராலும் செய்தற்குரியது; எளியது. ஆதலின் ஆழ்வார்கள் தம் பாசுரங்களில் பிரபத்தி நெறி பற்றியே மிகுதியும் வலியுத்திப் பாடியுள்ளனர். இ்ந்நெறி சரணாகதி, பரந்யாசம், பரசமர்ப்பணம் என்ற பெயர்களாலும் வழங்கப்பெறும். |
||||||||
4.2.1 பிரபத்தி - இலக்கணம் | ||||||||
இறைவனை ஆறாகவும் (வழியாகவும்) பேறாகவும் (பயனாகவும்) கொண்டு அவன் திருவடிகளில் தஞ்சம் புகும் அடைக்கல நெறியே பிரபத்தி எனப்படுகிறது. தனக்கு வேறு புகலிடமற்ற நிலையையும் (புகலறுதி), தன்னைக் காத்துக்கொள்ளக்கூடிய செயலற்ற நிலையையும் (செயலறுதி) நினைத்து இறைவனைச் சரணடைவதே பிரபத்தி யோகமாகும். மற்ற நெறிகளில் ஆறும் (வழியும்) பேறும் (பயனும்) வெவ்வேறாக உள்ளன. இந்நெறியில் இரண்டும் ஒன்றாக அமைகின்றன. இது, கைகால் முதலிய உறுப்புக்களால் செய்யப்படுவது அன்று. இறைவன் நம்மைக் கைவிடான் : என்னும் திடமான எண்ணமே இதற்கு அடிப்படை. என்னைக் காத்தருள வேண்டிய பாரம் உன்னைச் சார்ந்ததாதலால் உன்னை எதிர்பார்த்திருப்பது தவிர என்னால் ஆவது ஒன்றுமில்லை என்னும் திடமான எண்ணத்துடன் அவன் காலைக் கட்டிக் கொள்வதே இதன் இலக்கணமாகும். |
||||||||
4.2.2 பிரபத்தியும் ஆழ்வார்களும் |
||||||||
நெறியெல்லாம் எடுத்துரைத்த
நிறைஞானத்து ஒரு
(ஆயன் = ஆயர்குலத்தில் அவதரித்த கண்ணன்;
(சரண் = திருவடிகள்; சரண் = புகல்)
என்பார் திருமங்கையாழ்வார்.
என்பார் பெரியாழ்வார். நம்மாழ்வாரும்,
(சரண் = புகல்)
(ஆறு = உபாயம், வழி; சரணாக = புகலாக , உபாயமாக)
(சரண் = திருவடிகள்; சரண் = புகல், உபாயம்)
(அகலகில்லேன் = விட்டுப்பிரியேன்; இறையும் = சிறிது |
||||||||
4.2.3 பிரபத்தி - நெகிழ்ச்சியும் கட்டுப்பாடும் |
||||||||
இன்ன காலத்தில், இன்ன இடத்தில், இன்னார்தான்
செய்ய வேண்டும் (காலதேச அதிகாரி நியமங்கள்) என்பது போன்ற வரையறைகள் இப்பிரபத்தி நெறிக்கு இல்லை. அசுத்தனுக்குச் சுத்தி தேடவேண்டியதில்லை. கங்கையிலே நீராடப்போகிறவன் ஓர் உவர்க்குழியிலே இறங்க வேண்டுமா? வீடணன் கடல் கடந்து வந்தபோது ஒருமுழுக்கிட்டு வந்து இராமபிரான் திருவடிகளைப் பற்றவில்லையே? ‘திரௌபதி தன்னைத் தூய்மை செய்துகொண்டா கோவிந்தா என்று கூப்பிட்டாள்?’ பார்த்தனும் சரம சுலோகம் கேட்டது போர்க்களத்திலே அல்லவா? எனவே பிரபத்தி செய்வார் தூயராய் நின்று பிரபத்தி செய்ய வேண்டும் என்னும் நியதி இல்லாமை தெளிவாகின்றது. இந்நெறிக்கு ஒரு தூய்மையும் வேண்டா; தூய்மையின்மையை ஈட்டவும் வேண்டா. நின்றநிலையே அமையும். எல்லாவிடத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லாரும் இதனைச் செய்யலாம். எல்லாப் பலன்களையும் இது கொடுக்கவல்லது. ஆனால் ஸ்ரீமந்நாராயணனிடத்திலேயே இதனைச் செய்யவேண்டும் என்னும் வரையறை (விஷயநியமம்) மட்டுமே இப்பிரபத்தி நெறிக்கு உண்டு. சாதாரணமானவர்களும் பிரபத்தி செய்வதற்காகவே இறைவன் கோயில்களில் அர்ச்சை வடிவில் (திருவுருவத்தோடு - சிலை வடிவில்) காட்சி தருகிறான். இறைவனுக்குரிய பரத்வம் (விண்ணாட்டுநிலை) முதலான ஐவகை நிலைகளில் அர்ச்சாவதாரமே அவனை அணுகி வழிபடுவதற்கு ஏற்றது. எனவே ஆழ்வார்கள் பல இடங்களிலும், அர்ச்சையிலேயே சரணாகதி செய்து (ஸ்ரீவசனபூஷணம், சூத்திரம், 38) அடியார்களுக்கு வழிகாட்டியுள்ளனர். இதனால் பிரபத்தி மூலம் தன்னையே நேரே பற்றினார்க்கு இறைவனே வழியாக அமைகிறான் என்பதும், பிரபத்தியை ஒரு காரணமாகக் கொண்டு உயிர்களைக் காத்தருளுகின்றான் என்பதும் இனிது விளங்கும். |
1. |
|
||
2. |
|
||
3. |
|
||
4. |
|