5.0 பாடமுன்னுரை |
இந்தியத் தத்துவ ஞான வரலாற்றில் சங்கரர்
(கி.பி. 788-820), இராமாநுசர் (கி.பி. 1017-1137), மத்வர் (கி.பி. 1199-1278) என்னும் மூன்று பெயர்களும் முக்கியமானவை. இம்மூவரும் ஞானப்பேரரசர்களாக விளங்கியவர்கள். அவர்கள் முறையே அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் என்னும் கோட்பாட்டை வழங்கியவர்கள். இம்மூவருள்ளும் சமய தத்துவ எல்லையைத் தாண்டிப் பொதுநிலையில் உள்ள பலராலும் அதிகம் பேசப்பெற்றவர் இராமாநுசர் ஒருவரே. வைணவ சமயம் இன்றளவும் சிறப்புடன் நிலை |