| சாரியைஉள்வழித் தன்னுருபு நிலையலும் சாரியை இயற்கை உறழத் தோன்றலும் உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் அஃறிணை விரவுப்பெயர்க்குஅவ்வியல்நிலையலும் மெய்பிறி தாகிடத்து இயற்கை யாதலும் அன்ன பிறவும் தன்னியல் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்வரைந்திசைக்கும் ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப.
| 157 |
77 | வேற்றுமை அல்வழி இஐ என்னும் ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய அவைதாம், இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் என்மனார் புலவர்.
| 158 |
78 | உயிரும் புள்ளியும் இறுதி யாகி அளவும் நிறையும் எண்ணும் சுட்டி உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் தத்தம் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉம் காலந் தோன்றின் ஒத்தது என்ப ஏயென் சாரியை.
| 164 |
85 | சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்தே.
| 209 |
95 | அன்றுவரு காலை ஆவா குதலும் ஐவரு காலை மெய்வரைந்த கெடுதலும் செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப.
| 258 |
97 | எகர ஒகரம் பெயர்க்கீ றாக முன்னிலை மொழிய என்மனார் புலவர் தேற்றமும் சிறப்பும் அல்வழி யான.
| 272 |
98 | தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகாஅ. | 273 |