தொடக்கம் |
திருமுருகு
ஆற்றுப்படை
(குமரவேளை
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது) | |
1.திருப்பரங்குன்றம் | |
குமரவேளின் பெருமை | |
தெய்வயானையின் கணவன் | |
இதன் பொருள் | |
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு | |
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு, | |
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி, | |
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள், | |
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை, | 5 |
மறு இல் கற்பின் வாணுதல் கணவன் | |
கடப்பமாலை புரளும் மார்பினன் |
|
கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை, |
|
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி, | |
தலைப் பெயல் தலைஇய தண் நறுங் கானத்து, | |
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து | 10 |
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன் | |
| |
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் |
|
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி, | |
கணைக் கால், வாங்கிய நுசுப்பின், பணைத் தோள், | |
கோபத்து அன்ன தோயாப் பூந் துகில், | 15 |
பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல், | |
கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின், | |
நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர்இழை, | |
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி | |
துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச் | 20 |
செங் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு, | |
பைந் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளி, | |
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து, | |
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் | |
மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து, | 25 |
துவர முடித்த துகள் அறும் முச்சிப் | |
பெருந் தண் சண்பகம் செரீஇ, கருந் தகட்டு | |
உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டி, | |
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு | |
இணைப்புறு பிணையல் வளைஇ, துணைத் தக | 30 |
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் | |
நுண் பூண் ஆகம் திளைப்ப, திண் காழ் | |
நறுங் குறடு உரிஞ்சிய பூங் கேழ்த் தேய்வை, | |
தேம் கமழ் மருது இணர் கடுப்ப, கோங்கின் | |
குவி முகிழ் இள முலைக் கொட்டி, விரி மலர் | 35 |
வேங்கை நுண் தாது அப்பி, காண்வர, | |
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா, | |
'கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி | |
வாழிய பெரிது!' என்று ஏத்தி, பலர் உடன் | |
சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி | 40 |
சூரரமகளிர் ஆடும் சோலை, | |
காந்தளின் கண்ணி சூடிய சென்னியன் |
|
மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து, |
|
சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள் | |
பெருந் தண் கண்ணி மிலைந்த சென்னியன் | |
முருகன் சூரனைத் தடிந்த வகை |
|
பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்கு, |
45 |
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் | |
பேய்மகளின் துணங்கைக் கூத்து |
|
உலறிய கதுப்பின், பிறழ் பல் பேழ் வாய், |
|
சுழல் விழிப் பசுங் கண், சூர்த்த நோக்கின், | |
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப் | |
பெரு முலை அலைக்கும் காதின், பிணர் மோட்டு, | 50 |
உரு கெழு செலவின், அஞ்சுவரு பேய்மகள் | |
குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல் | |
கண் தொட்டு உண்ட கழி முடைக் கருந் தலை | |
ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி, வெருவர | |
வென்று அடு விறற் களம் பாடி, தோள் பெயரா, | 55 |
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க | |
மாமரத்தை வெட்டிய வெற்றி |
|
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை, |
|
அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி, | |
அவுணர் நல் வலம் அடங்க, கவிழ் இணர் | |
மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து, | 60 |
எய்யா நல் இசை, செவ் வேல் சேஎய் | |
ஆற்றுப்படுத்தல் | |
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு, |
|
நலம் புரி கொள்கைப் புலம் பிரிந்து உறையும், | |
செலவு நீ நயந்தனை ஆயின், பல உடன், | |
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப, | 65 |
இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே: | |
திருப்பரங்குன்றில் முருகன் வீற்றிருத்தல் |
|
செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடுங் கொடி |
|
வரிப் புனை பந்தொடு பாவை தூங்க, | |
பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில், | |
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து, | 70 |
மாடம் மலி மறுகின் கூடல் குடவயின் | |
இருஞ் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த | |
முள் தாள் தாமரைத் துஞ்சி, வைகறைக் | |
கள் கமழ் நெய்தல் ஊதி, எல் படக் | |
கண்போல் மலர்ந்த காமரு சுனை மலர், | 75 |
அஞ்சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும் | |
குன்று அமர்ந்து உறைதலும் உரியன். அதாஅன்று, | |
2. திருச் சீர் அலைவாய் |
|
ஆறுமுகன் யானையின்மேல் ஏறி வருதல் |
|
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் |
|
வாடா மாலை ஓடையொடு துயல்வர, | |
படு மணி இரட்டும் மருங்கின், கடு நடை, | 80 |
கூற்றத்தன்ன மாற்று அரு மொய்ம்பின், | |
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு | |
ஆறு முகங்களின் இயல்புகள் |
|
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய |
|
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி | |
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, | 85 |
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை | |
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ | |
அகலா மீனின் அவிர்வன இமைப்ப, | |
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் | |
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே: | 90 |
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க, | |
பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம், | |
ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி, | |
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம் | |
மந்திர விதியின் மரபுளி வழாஅ | 95 |
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம் | |
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி, | |
திங்கள் போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம் | |
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி, | |
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம் | 100 |
குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின் | |
மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே; | |
ஆங்கு, அம் மூஇரு முகனும், முறை நவின்று ஒழுகலின் | |
பன்னிரு கைகளின் தொழில்கள் |
|
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் |
|
செம் பொறி வாங்கிய, மொய்ம்பின், சுடர் விடுபு, | 105 |
வண் புகழ் நிறைந்து, வசிந்து வாங்கு, நிமிர் தோள்: | |
விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது | |
ஒரு கை, உக்கம் சேர்த்தியது ஒரு கை; | |
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒரு கை, | |
அங்குசம் கடாவ ஒரு கை; இரு கை | 110 |
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப; ஒரு கை | |
மார்பொடு விளங்க, ஒரு கை | |
தாரொடு பொலிய; ஒரு கை | |
கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப, ஒரு கை | |
பாடு இன் படு மணி இரட்ட; ஒரு கை | 115 |
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய, ஒரு கை | |
வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட; | |
ஆங்கு, அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி | |
அலைவாயில் ஆறுமுகன் வந்தருளியிருக்கும் காட்சி |
|
அந்தரப் பல்லியம் கறங்க, திண் காழ் |
|
வயிர் எழுந்து இசைப்ப, வால் வளை ஞரல, | 120 |
உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு | |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ, | |
விசும்பு ஆறு ஆக விரைசெலல் முன்னி, | |
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர் | |
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே. அதாஅன்று, | 125 |
3. திரு ஆவினன்குடி | |
முன் செல்லும் முனிவரது இயல்புகள் |
|
சீரை தைஇய உடுக்கையர், சீரொடு |
|
வலம் புரி புரையும் வால் நரை முடியினர், | |
மாசு அற இமைக்கும் உருவினர், மானின் | |
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் | |
என்பு எழுந்து இயங்கும் யாக்கையர், நன் பகல் | 130 |
பல உடன் கழிந்த உண்டியர், இகலொடு | |
செற்றம் நீக்கிய மனத்தினர், யாவதும் | |
கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத் | |
தாம் வரம்பு ஆகிய தலைமையர், காமமொடு | |
கடுஞ் சினம் கடிந்த காட்சியர், இடும்பை | 135 |
யாவதும் அறியா இயல்பினர், மேவரத் | |
துனி இல் காட்சி முனிவர், முன் புக | |
பாடுவார் இயல்பு | |
புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை, |
|
முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து, | |
செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் | 140 |
நல் யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் | |
மென் மொழி மேவலர், இன் நரம்பு உளர | |
பாடும் மகளிர் இயல்பு |
|
நோய் இன்று இயன்ற யாக்கையர், மாவின் |
|
அவிர் தளிர் புரையும் மேனியர், அவிர்தொறும் | |
பொன்னுரை கடுக்கும் திதலையர், இன் நகைப் | 145 |
பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல், | |
மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க: | |
|
|
கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால் எயிற்று, |
|
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந் திறல், | |
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ் சிறைப் | 150 |
புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு | |
வலம்வயின் உயரிய, பலர் புகழ் திணி தோள், | |
உமை அமர்ந்து விளங்கும், இமையா முக் கண், | |
மூஎயில் முருக்கிய, முரண் மிகு செல்வனும் | |
நூற்றுப் பத்து அடுக்கிய நாட்டத்து, நூறு பல் | 155 |
வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து, | |
ஈர் இரண்டு ஏந்திய மருப்பின், எழில் நடை, | |
தாழ் பெருந் தடக் கை உயர்த்த யானை | |
எருத்தம் ஏறிய திருக் கிளர் செல்வனும் | |
பிரமனுக்காகத் திரண்டு வந்த தேவர்கள் |
|
நாற் பெருந் தெய்வத்து நல் நகர் நிலைஇய |
160 |
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் | |
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக, | |
ஏமுறு ஞாலம்தன்னில் தோன்றி, | |
தாமரை பயந்த தா இல் ஊழி | |
நான்முக ஒருவற் சுட்டி, காண்வர, | 165 |
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி | |
நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு, | |
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெரீஇயர் | |
தேவர்கள் வருகின்ற காட்சி |
|
மீன் பூத்தன்ன தோன்றலர், மீன் சேர்பு |
|
வளி கிளர்ந்தன்ன செலவினர், வளியிடைத் | 170 |
தீ எழுந்தன்ன திறலினர், தீப் பட | |
உரும் இடித்தன்ன குரலினர், விழுமிய | |
உறு குறை மருங்கில் தம் பெறுமுறை கொண்மார், | |
அந்தரக் கொட்பினர், வந்து உடன் காண, | |
முருகன் மடந்தையோடு வீற்றிருத்தல் |
|
தா இல் கொள்கை மடந்தையொடு, சில் நாள், |
175 |
ஆவினன்குடி அசைதலும் உரியன். அதாஅன்று, | |
4. திரு ஏரகம் | |
இரு பிறப்பாளரின் இயல்பு |
|
இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது, |
|
இருவர்ச் சுட்டிய பல் வேறு தொல் குடி, | |
அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு | |
ஆறினில் கழிப்பிய, அறன் நவில் கொள்கை, | 180 |
மூன்று வகைக் குறித்த முத் தீச் செல்வத்து, | |
இருபிறப்பாளர், பொழுது அறிந்து நுவல | |
அந்தணர் வழிபடும் முறை |
|
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண், |
|
புலராக் காழகம் புலர உடீஇ, | |
உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து, | 185 |
ஆறு எழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி | |
நா இயல் மருங்கில் நவிலப் பாடி, | |
விரை உறு நறு மலர் ஏந்திப் பெரிது உவந்து, | |
ஏரகத்து உறைதலும் உரியன். அதாஅன்று, | |
5. குன்றுதொறு ஆடல் | |
குரவைக் கூத்து |
|
பைங்கொடி, நறைக் காய் இடை இடுபு, வேலன், |
190 |
அம் பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு | |
வெண் கூதாளம் தொடுத்த கண்ணியன்; | |
நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின்: | |
கொடுந் தொழில் வல் வில் கொலைஇய கானவர் | |
நீடு அமை விளைந்த தேக் கள் தேறல் | 195 |
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து, | |
தொண்டகச் சிறு பறைக் குரவை அயர | |
குன்றுதோறும் ஆடல்புரியும் தன்மை |
|
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங் கான், |
|
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி, | |
இணைத்த கோதை, அணைத்த கூந்தல்; | 200 |
முடித்த குல்லை, இலையுடை நறும் பூ, | |
செங் கால் மராஅத்த வால் இணர், இடை இடுபு, | |
சுரும்பு உணத் தொடுத்த பெருந் தண் மாத் தழை | |
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ, | |
மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு | 205 |
செய்யன், சிவந்த ஆடையன், செவ்வரைச் | |
செயலைத் தண் தளிர் துயல் வரும் காதினன், | |
கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன், | |
குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன், | |
தகரன், மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம் | 210 |
கொடியன், நெடியன், தொடி அணி தோளன் | |
நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு, | |
குறும் பொறிக் கொண்ட நறுந் தண் சாயல் | |
மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன், | |
முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி, | 215 |
மென் தோள் பல் பிணை தழீஇ, தலைத்தந்து, | |
குன்றுதோறு ஆடலும் நின்ற தன் பண்பே. அதாஅன்று, | |
6. பழமுதிர்சோலை | |
முருகன் இருப்பிடங்கள் |
|
சிறு தினை மலரொடு விரைஇ, மறி அறுத்து, |
|
வாரணக் கொடியொடு வயிற் பட நிறீஇ, | |
ஊர்ஊர் கொண்ட சீர் கெழு விழவினும், | 220 |
ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும், | |
வேலன் தைஇய வெறி அயர் களனும், | |
காடும் காவும், கவின் பெறு துருத்தியும், | |
யாறும் குளனும், வேறு பல் வைப்பும், | |
சதுக்கமும் சந்தியும், புதுப் பூங் கடம்பும், | 225 |
மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும் | |
குறமகளின் வெறியாட்டு |
|
நகரில் முருகனை ஆற்றுப்படுத்தல் |
|
மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர, |
|
நெய்யோடு ஐயவி அப்பி, ஐது உரை த்து, | |
குடந்தம்பட்டு, கொழு மலர் சிதறி, | |
முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ, | 230 |
செந் நூல் யாத்து, வெண் பொரி சிதறி, | |
மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக் | |
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி | |
சில் பலிச் செய்து, பல் பிரப்பு இரீஇ, | |
சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து, | 235 |
பெருந் தண் கணவீர நறுந் தண் மாலை | |
துணை அற அறுத்துத் தூங்க நாற்றி, | |
நளி மலைச் சிலம்பில் நல் நகர் வாழ்த்தி, | |
நறும் புகை எடுத்து, குறிஞ்சி பாடி, | |
இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க, | 240 |
உருவப் பல் பூத் தூஉய், வெருவரக் | |
குருதிச் செந் தினை பரப்பி, குறமகள் | |
முருகு இயம் நிறுத்து, முரணினர் உட்க, | |
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் | |
முருகனை வழிபடுதல் | |
ஆடு களம் சிலம்பப் பாடி, பலவுடன் |
245 |
கோடு வாய்வைத்து, கொடு மணி இயக்கி, | |
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி, | |
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட, | |
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தவாறே. | |
முருகனைக் கண்டு துதித்தல் |
|
ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக, காண் தக |
250 |
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்தி, | |
கை தொழூஉப் பரவி, கால் உற வணங்கி | |
'நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ் சுனை, | |
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப, | |
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ! | 255 |
ஆல் கெழு கடவுள் புதல்வ! மால் வரை | |
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே! | |
வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ! | |
இழை அணி சிறப்பின் பழையோள் குழவி! | |
வானோர், வணங்கு வில், தானைத் தலைவ! | 260 |
மாலை மார்ப! நூல் அறி புலவ! | |
செருவில் ஒருவ! பொரு விறல் மள்ள! | |
அந்தணர் வெறுக்கை! அறிந்தோர் சொல்மலை! | |
மங்கையர் கணவ! மைந்தர் ஏறே! | |
வேல் கெழு தடக் கைச் சால் பெருஞ் செல்வ! | 265 |
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து, | |
விண் பொரு நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ! | |
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே! | |
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக! | |
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேர் ஆள! | 270 |
அலந்தோர்க்கு அளிக்கும், பொலம் பூண், சேஎய்! | |
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து, | |
பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேஎள்! | |
பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள்! | |
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி! | 275 |
போர் மிகு பொருந! குரிசில்!' எனப் பல, | |
யான் அறி அளவையின், ஏத்தி, ஆனாது | |
கருதி வந்ததை மொழிதல் |
|
'நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின், |
|
நின் அடி உள்ளி வந்தனென்; நின்னொடு | |
புரையுநர் இல்லாப் புலமையோய்!' எனக் | |
குறித்தது மொழியா அளவையின் | |
சேவிப்போர் கூற்று | |
குறித்து உடன் |
|
வேறு பல் உருவின் குறும் பல் கூளியர், | |
சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி, | |
'அளியன் தானே முது வாய் இரவலன்; | |
வந்தோன், பெரும! நின் வண் புகழ் நயந்து' என | 285 |
'இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி:' | |
முருகன் அருள்புரிதல் |
|
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின், |
|
வான் தோய் நிவப்பின், தான் வந்து எய்தி, | |
அணங்கு சால் உயர்நிலை தழீஇ, பண்டைத் தன் | |
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி, | 290 |
'அஞ்சல் ஓம்புமதி, அறிவல் நின் வரவு' என, | |
அன்புடை நல் மொழி அளைஇ, விளிவு இன்று, | |
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து | |
ஒரு நீ ஆகித் தோன்ற, விழுமிய | |
பெறல் அரும் பரிசில் நல்குமதி | 295 |
அருவியின் காட்சியும் இயற்கைவளமும் |
|
பலவுடன் |
|
வேறு பல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து, | |
ஆர முழு முதல் உருட்டி, வேரல் | |
பூவுடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு, | |
விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த | |
தண் கமழ் அலர் இறால் சிதைய, நன் பல | 300 |
ஆசினி முது சுளை கலாவ, மீமிசை | |
நாக நறு மலர் உதிர, யூகமொடு | |
மா முக முசுக்கலை பனிப்ப, பூ நுதல் | |
இரும் பிடி குளிர்ப்ப வீசி, பெருங் களிற்று | |
முத்துடை வான் கோடு தழீஇ, தத்துற்று | 305 |
நன் பொன் மணி நிறம் கிளர, பொன் கொழியா, | |
வாழை முழு முதல் துமிய, தாழை | |
இளநீர் விழுக் குலை உதிர, தாக்கி, | |
கறிக் கொடிக் கருந் துணர் சாய, பொறிப் புற | |
மட நடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ, | 310 |
கோழி வயப் பெடை இரிய, கேழலொடு | |
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன | |
குரூஉ மயிர் யாக்கைக் குடா வடி உளியம் | |
பெருங் கல் விடர்அளைச் செறிய, கருங் கோட்டு | |
ஆமா நல் ஏறு சிலைப்ப, சேண் நின்று | 315 |
இழுமென இழிதரும் அருவி, | |
பழம் முதிர் சோலைமலை கிழவோனே.! | |
இதன் பொருள் | |
| |
| |
தனிப் பாடல்கள் | |
குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்! |
|
புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும் | |
இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே! | |
உளையாய்! என் உள்ளத்து உறை. | 1 |
குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும், |
|
அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், - இன்று என்னைக் | |
கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும், | |
மெய் விடா வீரன் கை வேல்! | 2 |
வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட |
|
தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி | |
குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும் | |
துளைத்த வேல் உண்டே துணை. | 3 |
இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும், |
|
கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் | |
பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட | |
தனி வேலை வாங்கத் தகும். | 4 |
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்; |
|
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக் | |
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும் | |
வேலப்பா! செந்தி வாழ்வே! | 5 |
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்; |
|
வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில் | |
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும் | |
'முருகா!' என்று ஓதுவார் முன். | 6 |
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன் |
|
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன் | |
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் | |
நம்பியே கைதொழுவேன், நான். | 7 |
காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால், |
|
ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும் | |
கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல | |
இடம்காண்; இரங்காய், இனி! | 8 |
பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம் |
|
கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு, - சுருங்காமல், | |
ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப் | |
பூசையாக் கொண்டே புகல். | 9 |
நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை |
|
தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோல | |
மா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி, | |
தான் நினைத்த எல்லாம் தரும். | 10 |