பாணனது யாழின் வருணனை | |
இதன் பொருள் |
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி, |
|
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி |
|
காய் சினம் திருகிய கடுந் திறல் வேனில், |
|
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி |
|
வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் |
5 |
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சை; |
|
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக் |
|
கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை; |
|
உருக்கியன்ன, பொருத்துறு போர்வை; |
|
சுனை வறந்தன்ன, இருள் தூங்கு வறு வாய்; |
10 |
பிறை பிறந்தன்ன, பின்ஏந்து கவைக் கடை; |
|
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக் |
|
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்; |
|
மணி வார்ந்தன்ன, மா இரு மருப்பின்; |
|
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் |
15 |
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ, |
|
பாணனது வறுமை
| |
வெந் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் |
|
தண் கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது, |
|
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப் |
|
பழுமரம் தேரும் பறவை போல, |
20 |
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும் |
|
புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண! |
|
பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்து உரை
த்தல்
|
|
பெரு வறம் கூர்ந்த கானம் கல்லெனக் |
|
கருவி வானம் துளி சொரிந்தாங்கு, |
|
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு |
25 |
வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி, |
|
வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு, |
|
யாம் அவணின்றும் வருதும்- |
|
திரையனது சிறப்பை அறிவித்தல்
| |
நீயிரும், |
|
இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் |
|
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந் நீர்த் |
30 |
திரை தரு மரபின், உரவோன் உம்பல், |
|
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் |
|
முரசு முழங்கு தானை மூவருள்ளும், |
|
இலங்கு நீர்ப் பரப்பின் வளை மீக்கூறும் |
|
வலம்புரி அன்ன, வசை நீங்கு சிறப்பின், |
35 |
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல், |
|
பல் வேல் திரையற் படர்குவிர் ஆயின் |
|
கேள், அவன் நிலையே; கெடுக நின் அவலம்! |
|
திரையனது ஆணை
| |
அத்தம் செல்வோர் அலறத் தாக்கி, |
|
கைப் பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக் |
40 |
கொடியோர் இன்று, அவன் கடியுடை வியன் புலம்; |
|
உருமும் உரறாது; அரவும் தப்பா; |
|
காட்டு மாவும் உறுகண் செய்யா; |
|
வேட்டு, ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கி, |
|
சென்மோ, இரவல! சிறக்க நின் உள்ளம்! |
45 |
உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி
|
|
கொழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து, |
|
முழவின் அன்ன முழுமர உருளி, |
|
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக் கை நோன் பார், |
|
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன, |
|
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடம் |
50 |
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக் |
|
கோழி சேக்கும் கூடுடைப் புதவின், |
|
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் |
|
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி, |
|
நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த |
55 |
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து, |
|
காடி வைத்த கலனுடை மூக்கின் |
|
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்ப |
|
கோட்டுஇணர் வேம்பின் ஏட்டுஇலை மிடைந்த |
|
படலைக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி தோள், |
60 |
முடலை யாக்கை, முழு வலி மாக்கள் |
|
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த |
|
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப, |
|
சில் பத உணவின் கொள்ளை சாற்றி, |
|
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி |
65 |
வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டு வழி
|
|
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக |
|
மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் |
|
அரும் பொருள் அருத்தும், திருந்து தொடை நோன் தாள் |
|
அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு |
|
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின், |
70 |
விரவு வரிக் கச்சின், வெண் கை ஒள் வாள், |
|
வரை ஊர் பாம்பின், பூண்டு புடை தூங்க, |
|
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை, |
|
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் தோள், |
|
கடம்பு அமர் நெடு வேள் அன்ன, மீளி, |
75 |
உடம்பிடித் தடக் கை ஓடா வம்பலர், |
|
தடவு நிலைப் பலவின் முழுமுதல் கொண்ட |
|
சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப, மிரியல் |
|
புணர்ப் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து |
|
அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும் |
80 |
உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும் |
|
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின் |
|
எயிற்றியர் குடிசை
| |
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த |
|
பூளை அம் பசுங் காய் புடை விரிந்தன்ன |
|
வரிப் புற அணிலொடு, கருப்பை ஆடாது, |
85 |
யாற்று அறல் புரையும் வெரிநுடைக், கொழு மடல், |
|
வேல் தலை அன்ன வைந் நுதி, நெடுந் தகர், |
|
ஈத்து இலை வேய்ந்த எய்ப் புறக் குரம்பை |
|
புல்லரிசி எடுத்தல்
| |
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி, |
|
ஈன் பிணவு ஒழியப் போகி, நோன் காழ் |
90 |
இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக் கோல் |
|
உளி வாய்ச் சுரையின் மிளிர மிண்டி, |
|
இரு நிலக் கரம்பைப் படு நீறு ஆடி, |
|
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் |
|
எயிற்றியர் அளிக்கும் உணவு
| |
பார்வை யாத்த பறை தாள் விளவின் |
95 |
நீழல் முன்றில், நில உரல் பெய்து, |
|
குறுங் காழ் உலக்கை ஓச்சி, நெடுங் கிணற்று |
|
வல் ஊற்று உவரி தோண்டி, தொல்லை |
|
முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி, |
|
வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் |
100 |
'வாடாத் தும்பை வயவர் பெருமகன், |
|
ஓடாத் தானை, ஒண் தொழில் கழல் கால், |
|
செவ் வரை நாடன், சென்னியம்' எனினே |
|
தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ, நும் |
|
பை தீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர். |
105 |
பாலை நிலக் கானவர்களின் வேட்டை
| |
மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின், |
|
வான் மடி பொழுதில், நீர் நசைஇக் குழித்த |
|
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி, |
|
புகழா வாகைப் பூவின் அன்ன |
|
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் |
110 |
அரை நாள் வேட்டம் அழுங்கின், பகல் நாள், |
|
பகுவாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி, |
|
தொகு வாய் வேலித் தொடர் வலை மாட்டி, |
|
முள் அரைத் தாமரைப் புல் இதழ் புரையும் |
|
நெடுஞ் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇ, |
115 |
கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் |
|
அருஞ் சுரம் இறந்த அம்பர் |
|
எயினரது அரணில் பெறும் பொருள்கள்
|
|
பருந்து பட, |
|
ஒன்னாத் தெவ்வர் நடுங்க, ஓச்சி, |
|
வைந் நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் |
|
வடி மணிப் பலகையொடு நிரைஇ, முடி நாண் |
120 |
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர்; |
|
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின், |
|
வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு |
|
கடுந் துடி தூங்கும் கணைக் கால் பந்தர், |
|
தொடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர்; |
125 |
வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பை, |
|
கொடு நுகம் தழீஇய புதவின், செந் நிலை |
|
நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில், |
|
கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின், |
|
களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன, |
130 |
சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி, |
|
ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின் |
|
வறை கால்யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர். |
|
குறிஞ்சி நில மக்களின் இயல்பும் தொழிலும்
|
|
யானை தாக்கினும், அரவு மேல் செலினும், |
|
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும், |
135 |
சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை, |
|
வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த, |
|
புலிப் போத்து அன்ன, புல் அணல் காளை, |
|
செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு, |
|
கேளா மன்னர் கடி புலம் புக்கு, |
140 |
நாள் ஆ தந்து, நறவு நொடை தொலைச்சி, |
|
இல் அடு கள் இன் தோப்பி பருகி, |
|
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி, |
|
மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச், |
|
சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி, வலன் வளையூஉ, |
145 |
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை |
|
முரண் தலை கழிந்த பின்றை |
|
கோவலர் குடியிருப்பு
| |
மறிய |
|
குளகு அரை யாத்த குறுங் கால், குரம்பை, |
|
செற்றை வாயில், செறி கழிக் கதவின், |
|
கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின், |
150 |
அதளோன் துஞ்சும் காப்பின் உதள, |
|
நெடுந் தாம்பு தொடுத்த குறுந் தறி முன்றில், |
|
கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும் |
|
இடு முள் வேலி எருப் படு வரைப்பின், |
|
நள் இருள் விடியல் புள் எழப் போகி |
155 |
புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, |
|
ஆம்பி வால் முகை அன்ன கூம்பு முகிழ் |
|
உறை அமை தீம் தயிர் கலக்கி, நுரை தெரிந்து, |
|
புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இரீஇ |
|
நாள் மோர் மாறும் நல் மா மேனி, |
160 |
சிறு குழை துயல்வரும் காதின், பணைத் தோள், |
|
குறு நெறிக் கொண்ட கூந்தல், ஆய் மகள் |
|
அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி, |
|
நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள், |
|
எருமை, நல் ஆன், கரு நாகு, பெறூஉம் |
165 |
மடி வாய்க் கோவலர் குடிவயின் சேப்பின், |
|
இருங் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன |
|
பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர். |
|
முல்லை நிலக் கோவலரின் குழலிசை
| |
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி, |
|
விழுத் தண்டு ஊன்றிய மழுத் தின் வன் கை, |
170 |
உறிக் கா ஊர்ந்த மறுப் படு மயிர்ச் சுவல், |
|
மேம் பால் உரை
த்த ஓரி, ஓங்கு மிசைக் |
|
கோட்டவும் கொடியவும் விரைஇ, காட்ட |
|
பல் பூ மிடைந்த படலைக் கண்ணி, |
|
ஒன்று அமர் உடுக்கை, கூழ் ஆர் இடையன் |
175 |
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி, |
|
அம் நுண் அவிர் புகை கமழ, கைம் முயன்று |
|
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழிச் |
|
செந் தீத் தோட்ட கருந் துளைக் குழலின் |
|
இன் தீம் பாலை முனையின், குமிழின் |
180 |
புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின் |
|
வில் யாழ் இசைக்கும், விரல் எறி, குறிஞ்சி, |
|
பல்கால் பறவை கிளை செத்து, ஓர்க்கும் |
|
புல் ஆர் வியன் புலம் போகி |
|
முல்லை நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிடைப்பன
|
|
முள் உடுத்து |
|
எழு காடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில் |
185 |
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில், |
|
களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர், |
|
குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி |
|
நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில், |
|
பருவ வானத்துப் பா மழை கடுப்பக் |
190 |
கரு வை வேய்ந்த, கவின் குடிச் சீறூர் |
|
நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன, |
|
குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றி, |
|
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன, |
|
அவரை வான் புழுக்கு அட்டி, பயில்வுற்று, |
195 |
இன் சுவை மூரல் பெறுகுவிர். |
|
மருத நிலத்தைச் சேர்ந்த முல்லைநிலம்
|
|
ஞாங்கர்க் |
|
குடி நிறை வல்சிச் செஞ் சால் உழவர் |
|
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி, |
|
பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் |
|
உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி, |
200 |
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை |
|
அரி புகு பொழுதின், இரியல் போகி, |
|
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன |
|
வளர் இளம் பிள்ளை தழீஇ, குறுங் கால் |
|
கறை அணல் குறும்பூழ், கட்சிச் சேக்கும் |
205 |
வன் புலம் இறந்த பின்றை |
|
மருத நிலக் கழனிகளில் காணும் காட்சிகள்
|
|
நாற்று நடுதல்
|
|
மென் தோல் |
|
மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்றன்ன |
|
கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதைய, |
|
பைஞ் சாய் கொன்ற மண் படு மருப்பின் |
|
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின், |
210 |
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் |
|
முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில், |
|
நெல் விளைதற் சிறப்பு
| |
களைஞர் தந்த கணைக் கால் நெய்தல் |
|
கள் கமழ் புதுப் பூ முனையின், முள் சினை |
|
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக் |
215 |
கொடுங் கால் மா மலர் கொய்து கொண்டு, அவண |
|
பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி, |
|
புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி |
|
ஈருடை இருந் தலை ஆரச் சூடி, |
|
பொன் காண் கட்டளை கடுப்ப, கண்பின் |
220 |
புன் காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின், |
|
இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல், |
|
கருங் கை வினைஞர் காதல் அம் சிறாஅர் |
|
பழஞ் சோற்று அமலை முனைஇ, வரம்பில் |
|
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் |
225 |
அவல் எறி உலக்கைப் பாடு விறந்து, அயல |
|
கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம், |
|
நீங்கா யாணர், வாங்கு கதிர்க் கழனி |
|
நெல் அரிந்து கடா விடுதல்
| |
கடுப்புடைப் பறவைச் சாதி அன்ன, |
|
பைது அற விளைந்த பெருஞ் செந்நெல்லின் |
230 |
தூம்புடைத் திரள் தாள் துமித்த வினைஞர் |
|
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல், |
|
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி, |
|
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும் |
|
துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல், |
235 |
சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் |
|
குழுமு நிலைப் போரின் முழு முதல் தொலைச்சி, |
|
பகடு ஊர்பு இழிந்த பின்றை, துகள் தப, |
|
வையும் துரும்பும் நீக்கி, பைது அற, |
|
குட காற்று எறிந்த குப்பை, வட பால் |
240 |
செம்பொன் மலையின், சிறப்பத் தோன்றும் |
|
தண் பணை தழீஇய தளரா இருக்கை |
|
மருத நிலத்து ஊர்களில் பெறும் உணவுகள்
|
|
பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக் |
|
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல், |
|
ஏணி எய்தா நீள் நெடு மார்பின், |
245 |
முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின், |
|
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல், |
|
தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த |
|
ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் |
|
தளர் நடை வருத்தம் வீட, அலர் முலைச் |
250 |
செவிலி அம் பெண்டிர்த் தழீஇ, பால் ஆர்ந்து, |
|
அமளித் துஞ்சும் அழகுடை நல் இல்; |
|
தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை |
|
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா |
|
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி |
255 |
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர். |
|
ஆலைகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல்
|
|
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து |
|
அணங்குடை யாளி தாக்கலின், பல உடன் |
|
கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு, |
|
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை |
260 |
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும், |
|
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின், |
|
வலைஞர் குடியிருப்பு
| |
வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ, |
|
தாழை முடித்து, தருப்பை வேய்ந்த |
|
குறியிறைக் குரம்பை, பறியுடை முன்றில், |
265 |
கொடுங் கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய |
|
பைங் காய் தூங்கும் பாய் மணல் பந்தர், |
|
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி, |
|
புலவு நுனைப் பகழியும் சிலையும் மான, |
|
செவ் வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் |
270 |
மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி, |
|
கோடை நீடினும் குறைபடல் அறியாத் |
|
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் |
|
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் |
|
வலைஞர் குடியில் பெறும் உணவு
| |
அவையா அரிசி அம் களித் துழவை |
275 |
மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றி, |
|
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் |
|
பூம் புற நல் அடை அளைஇ, தேம் பட |
|
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி, |
|
வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த, |
280 |
வெந் நீர், அரியல் விரல் அலை, நறும் பிழி, |
|
தண் மீன் சூட்டொடு, தளர்தலும் பெறுகுவிர். |
|
காலையில் நீர்ப்பூக்களைச் சூடிப் போதல்
|
|
பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல், |
|
கோள் வல், பாண்மகன் தலை வலித்து யாத்த |
|
நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇ, |
285 |
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப, |
|
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை |
|
நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் |
|
நீத்துடை நெடுங் கயம் தீப் பட மலர்ந்த |
|
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி, |
290 |
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந் தலை |
|
அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப, |
|
அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி, |
|
முரண் பூ மலிந்த முது நீர்ப் பொய்கை, |
|
குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் |
295 |
பெரு நாள் அமையத்துப் பிணையினிர் கழிமின், |
|
அந்தணரது உறைவிடங்களில் பெறுவன
| |
செழுங் கன்று யாத்த சிறு தாள் பந்தர், |
|
பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர், |
|
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது, |
|
வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் |
300 |
மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின் |
|
பெரு நல் வானத்து வடவயின் விளங்கும் |
|
சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல், |
|
வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட, |
|
சுடர்க்கடை, பறவைப் பெயர்ப் படு வத்தம், |
305 |
சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து |
|
உருப்புறு பசுங் காய்ப் போழொடு கறி கலந்து, |
|
கஞ்சக நறு முறி அளைஇ, பைந் துணர் |
|
நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த |
|
தகை மாண் காடியின், வகைபடப் பெறுகுவிர். |
310 |
நீர்ப்பெயற்று என்னும் ஊரின் சிறப்பு
|
|
வண்டல் ஆயமொடு உண்துறைத் தலைஇ, |
|
புனல் ஆடு மகளிர் இட்ட பொலங் குழை |
|
இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்தென, |
|
புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது, |
|
கேள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த |
315 |
வேள்வித் தூணத்து அசைஇ, யவனர் |
|
ஓதிம விளக்கின், உயர்மிசைக் கொண்ட, |
|
வைகுறு மீனின், பைபயத் தோன்றும் |
|
நீர்ப்பெயற்று எல்லைப் போகி |
|
திமிலர் முதலியோர் உறையும் பட்டினம்
|
|
பால்கேழ் |
|
வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம் |
320 |
நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை, |
|
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின், |
|
பரதர் மலிந்த பல் வேறு தெருவின், |
|
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின், |
|
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா, |
325 |
ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் |
|
கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர், |
|
கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல், |
|
பைங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க, |
|
மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் |
330 |
பீலி மஞ்ஞையின் இயலி, கால |
|
தமனியப் பொற்சிலம்பு ஒலிப்ப, உயர் நிலை |
|
வான் தோய் மாடத்து, வரிப் பந்து அசைஇ, |
|
கை புனை குறுந் தொடி தத்த, பைபய, |
|
முத்த வார் மணல் பொற்கழங்கு ஆடும் |
335 |
பட்டின மருங்கின் அசையின் |
|
பட்டினத்து மக்களின் உபசரிப்பு
| |
முட்டு இல், |
|
பைங் கொடி நுடங்கும் பலர் புகு வாயில் |
|
செம் பூத் தூஉய செதுக்குடை முன்றில், |
|
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய |
|
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் |
340 |
ஈர்ஞ் சேறு ஆடிய இரும் பல் குட்டிப் |
|
பல் மயிர்ப் பிணவொடு பாயம் போகாது, |
|
நெல் மா வல்சி தீற்றி, பல் நாள் |
|
குழி நிறுத்து, ஓம்பிய குறுந் தாள் ஏற்றைக் |
|
கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர். |
345 |
ஓடும் கலங்களை அழைக்கும் கடற்கரைத் துறை
|
|
வானம் ஊன்றிய மதலை போல, |
|
ஏணி சாத்திய ஏற்று அருஞ் சென்னி, |
|
விண் பொர நிவந்த, வேயா மாடத்து |
|
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி |
|
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் |
350 |
துறை பிறக்கு ஒழியப் போகி |
|
தோப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்
|
|
கறை அடிக் |
|
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும், |
|
வண் தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த, |
|
மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை, |
|
தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் |
355 |
தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம், |
|
வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர், |
|
கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் |
|
குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம், |
|
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும், |
360 |
தீம் பல் தாரம் முனையின், சேம்பின் |
|
முளைப் புற முதிர் கிழங்கு ஆர்குவிர். |
|
ஒதுக்குப் புற நாடுகளின் வளம்
| |
பகற் பெயல் |
|
மழை வீழ்ந்தன்ன மாத் தாள் கமுகின் |
|
புடை சூழ் தெங்கின் முப் புடைத் திரள் காய், |
|
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச் |
365 |
சோறு அடு குழிசி இளக, விழூஉம் |
|
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து, |
|
பல் மரம் நீள் இடைப் போகி, நல் நகர், |
|
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த, |
|
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் |
370 |
நாடு பல கழிந்த பின்றை |
|
திருவெஃகாவின் சிறப்பும் திருமால் வழிபாடும்
|
|
நீடு குலைக் |
|
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு, |
|
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண், |
|
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர், |
|
குறுங் கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடிப் |
375 |
பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூ, |
|
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த |
|
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல், |
|
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்ப, |
|
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள்கால் |
380 |
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன |
|
நீலப் பைங் குடம் தொலைச்சி, நாளும் |
|
பெரு மகிழ் இருக்கை மரீஇ; சிறு கோட்டுக் |
|
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்கு, |
|
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல், |
385 |
நறவு பெயர்த்து அமர்த்த நல் எழில் மழைக் கண், |
|
மடவரல் மகளிரொடு பகல் விளையாடி; |
|
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும் |
|
பொய்யா மரபின் பூ மலி பெருந் துறை, |
|
செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின் |
390 |
அருந் திறல் கடவுள் வாழ்த்தி, சிறிது நும் |
|
கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின். |
|
கச்சி மூதூரின் சிறப்பு
| |
காழோர் இகழ் பதம் நோக்கி, கீழ, |
|
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம் |
|
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில், |
395 |
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின், |
|
திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில், |
|
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ், |
|
கடை கால்யாத்த பல் குடி கெழீஇக் |
|
கொடையும் கோளும், வழங்குநர்த் தடுத்த |
400 |
அடையா வாயில், மிளை சூழ் படப்பை, |
|
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் |
|
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த் |
|
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி, |
|
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின், |
405 |
இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக் |
|
கொழு மென் சினைய கோளியுள்ளும் |
|
பழம் மீக் கூறும் பலாஅப் போல, |
|
புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய |
|
மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ, |
410 |
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் |
|
இளந்திரையனின் போர் வெற்றி
| |
அவ் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய் |
|
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப, |
|
வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப, |
|
ஈர் ஐம்பதின்மரும், பொருது, களத்து அவிய, |
415 |
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
|
ஆராச் செருவின் ஐவர் போல, |
|
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த |
|
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து, |
|
கச்சியோனே, கை வண் தோன்றல், |
420 |
நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய |
|
அரசனது முற்றச் சிறப்பு
| |
அளியும் தெறலும் எளியஆகலின், |
|
மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ் பட, |
|
நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப, |
|
நட்புக் கொளல் வேண்டி, நயந்திசினோரும், |
425 |
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும், |
|
கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு, |
|
பல் வேறு வகையின் பணிந்த மன்னர் |
|
இமையவர் உறையும் சிமையச் செவ் வரை, |
|
வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப் |
430 |
பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கைப் |
|
பெரு நீர் போகும் இரியல் மாக்கள் |
|
ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு |
|
தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ, |
|
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து, |
435 |
திரையன் மந்திரச் சுற்றத்தொடு அரசு வீற்றிருக்கும் காட்சி
|
|
பெருங் கை யானைக் கொடுந் தொடி படுக்கும் |
|
கருங் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த |
|
கூடத் திண் இசை வெரீஇ, மாடத்து |
|
இறை உறை புறவின் செங் கால் சேவல், |
|
இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர் |
440 |
குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் |
|
பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு, |
|
முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும், |
|
வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி, |
|
இடைத் தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி, |
445 |
கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து, |
|
உரும்பு இல் சுற்றமோடு இருந்தோற் குறுகி, |
|
பாணன் அரசனைப் போற்றிய வகை
| |
'பொறி வரிப் புகர்முகம் தாக்கிய வய மான் |
|
கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு, |
|
புலவர் பூண் கடன் ஆற்றி, பகைவர் |
450 |
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் |
|
வென்றி அல்லது, வினை உடம்படினும், |
|
ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கை, |
|
கொண்டி உண்டி, தொண்டையோர் மருக! |
|
மள்ளர் மள்ள! மறவர் மறவ! |
455 |
செல்வர் செல்வ! செரு மேம்படுந! |
|
வெண் திரைப் பரப்பின் கடுஞ் சூர் கொன்ற |
|
பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு, |
|
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்தாங்கு, |
|
தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி, |
460 |
வந்தேன், பெரும! வாழிய நெடிது!' என, |
|
இடனுடைப் பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, |
|
கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி, |
|
நின் நிலை தெரியா அளவை அந் நிலை |
|
பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்
|
|
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க, |
465 |
நில்லா உலகத்து நிலைமை தூக்கி, |
|
அந் நிலை அணுகல் வேண்டி, நின் அரைப் |
|
பாசி அன்ன சிதர்வை நீக்கி, |
|
ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் |
|
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, |
470 |
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை |
|
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங் குறை, |
|
அரி செத்து உணங்கிய பெருஞ் செந்நெல்லின் |
|
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல், |
|
அருங் கடித் தீம் சுவை அமுதொடு, பிறவும், |
475 |
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில், |
|
மீன் பூத்தன்ன வான் கலம் பரப்பி, |
|
மகமுறை, மகமுறை நோக்கி, முகன் அமர்ந்து, |
|
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி, |
|
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் |
480 |
பரிசு வழங்குதல்
| |
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை |
|
நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி; |
|
உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப் |
|
பகற் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு, |
|
புனை இருங் கதுப்பகம் பொலிய, பொன்னின் |
485 |
தொடை அமை மாலை விறலியர் மலைய; |
|
நூலோர் புகழ்ந்த மாட்சிய, மால் கடல் |
|
வளை கண்டன்ன வால் உளைப் புரவி, |
|
துணை புணர் தொழில, நால்கு உடன் பூட்டி, |
|
அரித் தேர் நல்கியும் அமையான், செருத் தொலைத்து |
490 |
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த |
|
விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ, |
|
அன்றே விடுக்கும் அவன் பரிசில். |
|
இளந்திரையனது மலையின் பெருமை
| |
இன் சீர்க் |
|
கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல், |
|
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின், |
495 |
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின், |
|
மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில், |
|
செந் தீப் பேணிய முனிவர், வெண் கோட்டுக் |
|
களிறு தரு விறகின் வேட்கும், |
|
ஒளிறு இலங்கு அருவிய மலைகிழவோனே. |
500 |
இதன் பொருள் |
தொண்டைமான் இளந்திரையனைக்
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
|
பெரும்பாண் ஆற்றுப்படை முற்றும்
|
தனிப் பாடல் | |
கங்குலும் நண் பகலும் துஞ்சா இயல்பிற்றாய், | |
மங்குல் சூழ் மாக் கடல் ஆர்ப்பதூஉம் - வெஞ் சின வேல் | |
கான் பயந்த கண்ணிக் கடு மான் திரையனை | |
யான் பயந்தேன்' என்னும் செருக்கு. | |