நல்லோர் விரிச்சி கேட்டல் | |
இதன் பொருள் |
'நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு |
|
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை |
|
நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல, |
|
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு, |
|
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி |
5 |
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை, |
|
அருங் கடி மூதூர் மருங்கில் போகி, |
|
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு, |
|
நாழி கொண்ட, நறு வீ முல்லை |
|
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, |
10 |
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப |
|
தலைவியைத் தேற்றுதல்
| |
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் |
|
உறு துயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் |
|
நடுங்கு சுவல் அசைத்த கையள்,"கைய |
|
கொடுங் கோற் கோவலர் பின் நின்று உய்த்தர, |
15 |
இன்னே வருகுவர், தாயர்" என்போள் |
|
நன்னர் நல் மொழி கேட்டனம்: அதனால், |
|
நல்ல, நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர் |
|
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து |
|
வருதல், தலைவர், வாய்வது; நீ நின் |
20 |
பருவரல் எவ்வம் களை, மாயோய்!' என, |
|
காட்டவும் காட்டவும் காணாள், கலுழ் சிறந்து, |
|
பூப் போல் உண் கண் புலம்பு முத்து உறைப்ப |
|
பாசறையின் இயல்பு
| |
கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில், |
|
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி, |
25 |
வேட்டுப் புழை அருப்பம் மாட்டி, காட்ட |
|
இடு முள் புரிசை ஏமுற வளைஇ, |
|
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி |
|
யானைப் பாகரது செயல்
| |
உவலைக் கூரை ஒழுகிய தெருவில், |
|
கவலை முற்றம் காவல் நின்ற |
30 |
தேம் படு கவுள சிறு கண் யானை |
|
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த, |
|
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து, |
|
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென, |
|
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி, |
35 |
கல்லா இளைஞர், கவளம் கைப்ப |
|
வீரர்கள் தங்கும் படைவீடுகள்
| |
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் |
|
முக் கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் |
|
ஓடா வல் வில் தூணி நாற்றி |
|
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை |
40 |
பூந் தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து, |
|
வாங்கு வில் அரணம் அரணம் ஆக, |
|
அரசனுக்கு அமைத்த பாசறை
| |
வேறு பல் பெரும் படை நாப்பண், வேறு ஓர், |
|
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு, |
|
மங்கையர் விளக்குகளை ஏந்துதல்
| |
குறுந் தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து, |
45 |
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் |
|
விரவு வரிக் கச்சின் பூண்ட, மங்கையர் |
|
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளீஇ, |
|
கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட, |
|
மெய்காப்பாளர் காவல்புரிதல்
| |
நெடு நா ஒள் மணி நிழத்திய நடு நாள், |
50 |
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர் |
|
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு, |
|
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப் |
|
பெரு மூதாளர் ஏமம் சூழ |
|
நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்
|
|
பொழுது அளந்து அறியும், பொய்யா மாக்கள், |
55 |
தொழுது காண் கையர், தோன்ற வாழ்த்தி, |
|
'எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய்! நின் |
|
குறு நீர்க் கன்னல் இனைத்து' என்று இசைப்ப |
|
அரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில் ஆழ்தல்
|
|
மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை, |
|
மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, |
60 |
வலி புணர் யாக்கை, வன்கண் யவனர் |
|
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல், |
|
திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண் |
|
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள் |
|
உடம்பின் உரைக்கும், உரையா நாவின், |
65 |
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக, |
|
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது, |
|
அரசனது சிந்தனை
| |
எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, |
|
பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் |
|
பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய, |
70 |
தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, |
|
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு |
|
வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, |
|
உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; |
|
ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை |
75 |
முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து |
|
பாசறையில் வெற்றி முழக்கம்
| |
பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல், |
|
நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி, |
|
அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை |
|
தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்
|
|
இன் துயில் வதியுநன் காணாள், துயர் உழந்து, |
80 |
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு, |
|
நீடு நினைந்து, தேற்றியும், ஓடு வளை திருத்தியும், |
|
மையல் கொண்டும், ஒய்யென உயிர்த்தும், |
|
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, இழை நெகிழ்ந்து, |
|
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல, |
85 |
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து, |
|
முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி |
|
இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் |
|
அஞ்செவி நிறைய ஆலின |
|
அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்
| |
வென்று, பிறர் |
|
வேண்டு புலம் கவர்ந்த, ஈண்டு பெருந் தானையொடு, |
90 |
விசயம், வெல் கொடி உயரி, வலன் ஏர்பு, |
|
வயிரும் வளையும் ஆர்ப்ப, |
|
மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்
|
|
அயிர |
|
செறி இலைக் காயா அஞ்சனம் மலர, |
|
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால, |
|
கோடல் குவி முகை அங்கை அவிழ, |
95 |
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப, |
|
கானம் நந்திய செந் நிலப் பெரு வழி, |
|
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின், |
|
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள, |
|
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில், |
100 |