இயற்கை வளம் |
|
இதன்
பொருள் |
ஓங்குதிரை வியன் பரப்பின் |
|
ஒலி முந்நீர் வரம்பு ஆக, |
|
தேன் தூங்கும் உயர் சிமைய |
|
மலை நாறிய வியல் ஞாலத்து, |
|
வல மாதிரத்தான் வளி கொட்ப, |
5 |
வியல் நாள்மீன் நெறி ஒழுக, |
|
பகல் செய்யும் செஞ் ஞாயிறும் |
|
இரவுச் செய்யும் வெண் திங்களும், |
|
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க, |
|
மழை தொழில் உதவ, மாதிரம் கொழுக்க, |
10 |
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய, |
|
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த, |
|
செயற்கைச் செழிப்பு நிலை
|
|
நோய் இகந்து நோக்கு விளங்க; |
|
மே தக, மிகப் பொலிந்த |
|
ஓங்கு நிலை வயக் களிறு; |
15 |
கண்டு தண்டாக் கட்கு இன்பத்து, |
|
உண்டு தண்டா மிகு வளத்தான், |
|
உயர் பூரிம விழுத் தெருவில், |
|
பொய் அறியா, வாய்மொழியால் |
|
புகழ் நிறைந்த, நல் மாந்தரொடு |
20 |
நல் ஊழி அடிப் படர, |
|
பல் வெள்ளம் மீக்கூற, |
|
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக! |
|
அகத்தியரின் வழிவந்த சான்றோன்
|
|
பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் |
|
நிணம் வாய்ப் பெய்த பேய் மகளிர் |
25 |
இணை ஒலி இமிழ் துணங்கைச் சீர்ப் |
|
பிணை யூபம் எழுந்து ஆட, |
|
அஞ்சு வந்த போர்க்களத்தான், |
|
ஆண் தலை அணங்கு அடுப்பின், |
|
வய வேந்தர் ஒண் குருதி |
30 |
சினத் தீயின் பெயர்பு பொங்க, |
|
தெறல் அருங் கடுந் துப்பின், |
|
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின், |
|
தொடித் தோள் கை துடுப்பு ஆக |
|
ஆடுற்ற ஊன் சோறு, |
35 |
நெறி அறிந்த கடி வாலுவன் |
|
அடி ஒதுங்கிப் பின் பெயராப் |
|
படையோர்க்கு முருகு அயர, |
|
அமர் கடக்கும் வியன் தானை |
|
தென்னவன் பெயரிய துன் அருந் துப்பின்
|
40 |
தொள் முது கடவுள் பின்னர்
மேய, |
|
வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந! |
|
வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல்
|
|
நால் வகைப் படைகளின் வலிமை |
|
விழுச் சூழிய, விளங்கு ஓடைய, |
|
கடுஞ் சினத்த, கமழ் கடாஅத்து |
|
அளறு பட்ட நறுஞ் சென்னிய, |
45 |
வரை மருளும் உயர் தோன்றல, |
|
வினை நவின்ற பேர் யானை |
|
சினம் சிறந்து களன் உழக்கவும்; |
|
மா எடுத்த மலி குரூஉத் துகள் |
|
அகல் வானத்து வெயில் கரப்பவும்; |
50 |
வாம் பரிய கடுந் திண் தேர் |
|
காற்று என்னக் கடிது கொட்பவும்; |
|
வாள் மிகு மற மைந்தர் |
|
தோள் முறையான் வீறு முற்றவும்; |
|
நெடியோனின் போர்த் திறமை
|
|
இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் |
55 |
பொருது, அவரைச் செரு வென்றும், |
|
இலங்கு அருவிய வரை நீந்தி, |
|
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல், |
|
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின், |
|
நிலம் தந்த பேர் உதவி, |
60 |
பொலந் தார் மார்பின், நெடியோன் உம்பல்! |
|
மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை
|
|
மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் |
|
நரை உருமின் ஏறு அனையை; |
|
அருங் குழு மிளை, குண்டு கிடங்கின், |
|
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின், |
65 |
நெடு மதில், நிரை ஞாயில், |
|
அம்பு உமிழ், அயில், அருப்பம் |
|
தண்டாது தலைச் சென்று, |
|
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் |
|
தென் குமரி வட பெருங்கல் |
70 |
குண குட கடலா எல்லைத் |
|
தொன்று மொழிந்து தொழில் கேட்ப, |
|
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய |
|
கொற்றவர்தம் கோன் ஆகுவை; |
|
கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி
|
|
வான் இயைந்த இரு முந்நீர்ப் |
75 |
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து, |
|
கொடும் புணரி விலங்கு போழ, |
|
கடுங் காலொடு, கரை சேர, |
|
நெடுங் கொடி மிசை, இதை எடுத்து, |
|
இன் இசைய முரசம் முழங்க, |
80 |
பொன் மலிந்த விழுப் பண்டம் |
|
நாடு ஆர நன்கு இழிதரும், |
|
ஆடு இயல் பெரு நாவாய், |
|
மழை முற்றிய மலை புரையத் |
|
துறை முற்றிய துளங்கு இருக்கை, |
85 |
தெண் கடல் குண்டு அகழி, |
|
சீர் சான்ற உயர் நெல்லின் |
|
ஊர் கொண்ட உயர் கொற்றவ! |
|
குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர
|
|
நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர் |
|
பாடு சிலம்பும் இசை, ஏற்றத் |
90 |
தோடு வழங்கும் அகல் ஆம்பியின், |
|
கயன், அகைய வயல் நிறைக்கும், |
|
மென் தொடை வன் கிழாஅர், |
|
அதரி கொள்பவர் பகடு பூண் தெள் மணி, |
|
இரும் புள் ஓப்பும் இசையே என்றும், |
95 |
மணிப் பூ முண்டகத்து மணல் மலி கானல் |
|
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப, |
|
பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல்
|
|
ஒரு சார், விழவு நின்ற வியல் ஆங்கண் |
|
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு, |
|
உரு கெழு பெருஞ் சிறப்பின் |
100 |
இரு பெயர்ப் பேர் ஆயமொடு |
|
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும், |
|
பொலந் தாமரைப் பூச் சூட்டியும், |
|
நலம் சான்ற கலம் சிதறும் |
|
பல் குட்டுவர் வெல் கோவே! |
105 |
முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு
|
|
கல் காயும் கடு வேனிலொடு |
|
இரு வானம் பெயல் ஒளிப்பினும், |
|
வரும் வைகல் மீன் பிறழினும், |
|
வெள்ளம் மாறாது விளையுள் பெருக, |
|
நெல்லின் ஓதை, அரிநர் கம்பலை, |
110 |
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே, என்றும் |
|
சலம் புகன்று சுறவுக் கலித்த |
|
புலவு நீர் வியன் பௌவத்து, |
|
நிலவுக் கானல் முழவுத் தாழைக் |
|
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல், |
115 |
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை, |
|
இருங் கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு, |
|
ஒலி ஓவாக் கலி யாணர் |
|
முதுவெள்ளிலை |
|
முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப,
தலையாலங்கானத்தில் பகைவர்களை வென்றமை
|
|
மீக்கூறும், |
|
வியல் மேவல் விழுச் செல்வத்து, |
120 |
இரு வகையான், இசை சான்ற, |
|
சிறுகுடிப் பெருந் தொழுவர், |
|
குடி கெழீஇய நால் நிலவரொடு, |
|
தொன்று மொழிந்து, தொழில் கேட்ப |
|
கால் என்னக் கடிது உராஅய், |
125 |
நாடு கெட எரி பரப்பி, |
|
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து, |
|
அரசு பட அமர் உழக்கி, |
|
முரசு கொண்டு களம் வேட்ட |
|
அடு திறல் உயர் புகழ் வேந்தே! |
130 |
கொற்கைக்குத் தலைவன்
|
|
நட்டவர் குடி உயர்க்குவை; |
|
செற்றவர் அரசு பெயர்க்குவை; |
|
பேர் உலகத்து மேஎந் தோன்றிச் |
|
சீருடைய விழுச் சிறப்பின், |
|
விளைந்து முதிர்ந்த விழு முத்தின், |
135 |
இலங்கு வளை, இருஞ் சேரி, |
|
கள் கொண்டிக் குடிப் பாக்கத்து, |
|
நல் கொற்கையோர் நசைப் பொருந! |
|
செழியன் பரதவரை வென்றமை
|
|
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று, |
|
அஞ்சு வரத் தட்கும் அணங்குடைத் துப்பின்,
|
140 |
கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சி, |
|
புலவு வில், பொலி கூவை, |
|
ஒன்று மொழி, ஒலி இருப்பின், |
|
தென் பரதவர் போர் ஏறே! |
|
பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி
|
|
அரிய எல்லாம் எளிதினின் கொண்டு, |
145 |
உரிய எல்லாம் ஓம்பாது வீசி, |
|
நனி புகன்று உறைதும் என்னாது, ஏற்று எழுந்து, |
|
பனி வார் சிமையக் கானம் போகி, |
|
அக நாடு புக்கு, அவர் அருப்பம் வௌவி, |
|
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து,
|
150 |
மேம்பட மரீஇய வெல் போர்க் குருசில்! |
|
பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை
|
|
உறு செறுநர் புலம் புக்கு, அவர் |
|
கடி காவின் நிலை தொலைச்சி, |
|
இழிபு அறியாப் பெருந் தண் பணை |
|
குரூஉக் கொடிய எரி மேய, |
155 |
நாடு எனும் பேர் காடு ஆக, |
|
ஆ சேந்த வழி மா சேப்ப, |
|
ஊர் இருந்த வழி பாழ் ஆக, |
|
இலங்கு வளை மட மங்கையர் |
|
துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப, |
160 |
அவை இருந்த பெரும் பொதியில், |
|
கவை அடிக் கடு நோக்கத்துப் |
|
பேய்மகளிர் பெயர்பு ஆட, |
|
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் |
|
நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின், |
165 |
அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ, |
|
கொழும் பதிய குடி தேம்பிச் |
|
செழுங் கேளிர் நிழல் சேர, |
|
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக்
|
|
குடுமிக் கூகை குராலொடு முரல, |
170 |
கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை, |
|
களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று,
ஊர்தர, |
|
நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் |
|
பல் மயிர்ப் பிணவொடு கேழல் உகள, |
|
வாழாமையின் வழி தவக் கெட்டு, |
175 |
பாழ் ஆயின, நின் பகைவர் தேஎம். |
|
பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல்
|
|
எழாஅத் தோள் இமிழ் முழக்கின், |
|
மாஅத் தாள், உயர் மருப்பின், |
|
கடுஞ் சினத்த களிறு பரப்பி |
|
விரி கடல் வியன் தானையொடு |
180 |
முருகு உறழப் பகைத்தலைச் சென்று, |
|
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ, |
|
பெயல் உறழக் கணை சிதறி, |
|
பல புரவி நீறு உகைப்ப, |
|
வளை நரல, வயிர் ஆர்ப்ப, |
185 |
பீடு அழியக் கடந்து அட்டு, அவர் |
|
நாடு அழிய எயில் வௌவி, |
|
சுற்றமொடு தூ அறுத்தலின், |
|
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப, |
|
வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி, |
190 |
அரசியல் பிழையாது அற நெறி காட்டி, |
|
பெரியோர் சென்ற அடி வழிப் பிழையாது, |
|
குடமுதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் |
|
வழி வழிச் சிறக்க, நின் வலம் படு கொற்றம்!
|
|
குணமுதல் தோன்றிய ஆர் இருள் மதியின் |
195 |
தேய்வன கெடுக, நின் தெவ்வர் ஆக்கம்! |
|
செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை
அறிவுறுத்தத் தொடங்குதல்
|
|
உயர் நிலை உலகம் அமிழ்தொடு பெறினும், |
|
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே; |
|
முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு |
|
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும், |
200 |
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே; |
|
தென் புல மருங்கின் விண்டு நிறைய |
|
வாணன் வைத்த விழு நிதி பெறினும், |
|
பழி நமக்கு எழுக என்னாய், விழு நிதி |
|
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே; |
205 |
அன்னாய்! நின்னொடு, முன்னிலை, எவனோ? |
|
கொன் ஒன்று கிளக்குவல், அடு போர் அண்ணல்! |
|
கேட்டிசின் வாழி! கெடுக நின் அவலம்! |
|
கெடாது நிலைஇயர், நின் சேண் விளங்கு நல்
இசை! |
|
உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல்
|
|
தவாப் பெருக்கத்து அறா யாணர், |
210 |
அழித்து ஆனாக் கொழுந் திற்றி |
|
இழித்து, ஆனாப் பல சொன்றி, |
|
உண்டு, ஆனாக் கூர் நறவின் |
|
தின்று, ஆனா இன வைகல் |
|
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கைப் |
215 |
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் |
|
நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி |
|
விறலியர் வறுங் கைக் குறுந் தொடி செறிப்ப |
|
பாணர் உவப்பக் களிறு பல தரீஇ, |
|
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ, |
220 |
மறம் கலங்கத் தலைச் சென்று, |
|
வாள் உழந்து, அதன் தாள் வாழ்த்தி, |
|
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத் |
|
தேரோடு மா சிதறி, |
|
சூடுற்ற சுடர்ப் பூவின், |
225 |
பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின், |
|
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக, |
|
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு, |
|
பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்ப, |
|
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார், |
230 |
பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப் |
|
படு கண் முரசம் காலை இயம்ப, |
|
வெடி படக் கடந்து, வேண்டு புலத்து இறுத்த, |
|
பணை கெழு பெருந் திறல், பல் வேல் மன்னர்,
|
|
கரை பொருது இரங்கும், கனை இரு முந்நீர்த் |
235 |
திரை இடு மணலினும் பலரே,உரை
செல |
|
மலர் தலை உலகம் ஆண்டு, கழிந்தோரே! |
|
மருத நில வளப்பம்
|
|
வலைஞர் இயல்பு
|
|
அதனால், குண கடல் கொண்டு குட கடல் முற்றி, |
|
இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது,
|
|
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி, |
240 |
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப, |
|
கழை வளர் சாரல், களிற்றினம் நடுங்க, |
|
வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து, |
|
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின், தாங்காது,
|
|
குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல்,
உந்தி |
245 |
நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி, |
|
களிறு மாய்க்கும் கதிர்க் கழனி; |
|
ஒளிறு இலஞ்சி; அடை நிவந்த |
|
முள் தாள சுடர்த் தாமரை, |
|
கள் கமழும் நறு நெய்தல், |
250 |
வள் இதழ் அவிழ் நீலம், |
|
மெல் இலை அரி ஆம்பலொடு, |
|
வண்டு இறைகொண்ட கமழ் பூம் பொய்கை; |
|
கம்புள் சேவல் இன் துயில் இரிய, |
|
வள்ளை நீக்கி, வய மீன் முகந்து, |
255 |
கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் |
|
வேழப் பழனத்து நூழிலாட்டு, |
|
கரும்பின் எந்திரம், கட்பின்,
ஓதை |
|
மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள்
|
|
அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் |
|
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே, |
260 |
ஒலிந்த பகன்றை விளைந்த கழனி |
|
வன் கை வினைஞர் அரிபறை, இன் குரல் |
|
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் |
|
கலி கொள் சும்மை, ஒலி கொள் ஆயம் |
|
ததைந்த கோதை தாரொடு பொலியப் |
265 |
புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், |
|
அகல் இரு வானத்து இமிழ்ந்து, இனிது இசைப்ப, |
|
குருகு நரல, மனை மரத்தான் |
|
மீன் சீவும் பாண் சேரியொடு, |
|
மருதம் சான்ற தண் பணை சுற்றி, ஒரு சார் |
270 |
முல்லை நிலக் காட்சிகள்
|
|
சிறு தினை கொய்ய, கவ்வை கறுப்ப, |
|
கருங் கால் வரகின் இருங் குரல் புலர, |
|
ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர, |
|
எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்ப |
|
பெருங் கவின் பெற்ற சிறு தலை நௌவி |
275 |
மடக் கண் பிணையொடு மறுகுவன உகள, |
|
சுடர்ப் பூங் கொன்றை தாஅய நீழல், |
|
பாஅயன்ன பாறை அணிந்து, |
|
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை தொறும்
|
|
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து, |
280 |
சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை, தாஅய், |
|
மணி மருள் நெய்தல், உறழ, காமர் |
|
துணி நீர் மெல் அவல், தொய்யிலொடு மலர, |
|
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப, |
|
முல்லை சான்ற புறவு அணிந்து, ஒரு சார் |
285 |
குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம்
|
|
நறுங் காழ் கொன்று, கோட்டின் வித்திய |
|
குறுங் கதிர்த் தோரை, நெடுங் கால் ஐயவி, |
|
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி; |
|
இஞ்சி, மஞ்சள், பைங் கறி, பிறவும், |
|
பல் வேறு தாரமொடு, கல்கத்து ஈண்டி |
290 |
தினை விளை சாரல் கிளி கடி பூசல், |
|
மணிப் பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும் |
|
ஆமா கடியும் கானவர் பூசல், |
|
சேணோன் அகழ்ந்த மடி வாய்ப் பயம்பின் |
|
வீழ் முகக் கேழல் அட்ட பூசல், |
295 |
கருங் கால் வேங்கை இருஞ் சினைப் பொங்கர் |
|
நறும் பூக் கொய்யும் பூசல், இருங் கேழ் |
|
ஏறு அடு வயப் புலிப் பூசலொடு, அனைத்தும், |
|
இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட,
|
|
கருங் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து, |
300 |
அருங் கடி மா மலை தழீஇ, ஒரு சார் |
|
பாலை நில இயல்பு
|
|
இரு வெதிர்ப் பைந் தூறு கூர் எரி நைப்ப, |
|
நிழத்த யானை மேய் புலம் படர, |
|
கலித்த இயவர் இயம் தொட்டன்ன, |
|
கண் விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து, |
305 |
அருவி ஆன்ற அணி இல் மா மலை, |
|
வை கண்டன்ன புல் முளி அம் காட்டு, |
|
கமஞ் சூழ் கோடை விடரகம் முகந்து, |
|
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை; |
|
இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி, |
310 |
உவலைக் கண்ணி, வன் சொல் இளைஞர் |
|
சிலையுடைக் கையர் கவலை காப்ப; |
|
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்து, |
|
பாலை சான்ற, சுரம் சேர்ந்து, ஒரு சார்
|
|
நெய்தல் நில இயல்பு
|
|
முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம், |
315 |
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு
வளை, |
|
பரதர் தந்த பல் வேறு கூலம், |
|
இருங் கழிச் செறுவின், தீம் புளி, வெள்
உப்பு, |
|
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கைத் திமிலர்
|
|
கொழு மீன் குறைஇய துடிக் கண் துணியல், |
320 |
விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் |
|
நனந் தலைத் தேஎத்து நல் கலன் உய்ம்மார், |
|
புணர்ந்து, உடன் கொணர்ந்த புரவியொடு,
அனைத்தும், |
|
வைகல்தோறும் வழிவழிச் சிறப்ப, |
|
நெய்தல் சான்ற வளம் பல பயின்று, ஆங்கு, |
325 |
ஐம் பால் திணையும் கவினி அமை வர |
|
மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும்
|
|
பாண்டி நாட்டிற்கு நடுவண் அமைந்து விளங்குதல்
|
|
முழவு இமிழும், அகல் ஆங்கண், |
|
விழவு நின்ற வியல் மறுகின், |
|
துணங்கை, அம் தழூஉவின், மணம் கமழ் சேரி,
|
|
இன் கலி யாணர், குழூஉப் பல பயின்று, ஆங்கு, |
330 |
பாடல் சான்ற நல் நாட்டு நடுவண் |
|
பெரும்பாணர் வாழும் இருக்கை
|
|
கலை தாய, உயர் சிமையத்து, |
|
மயில் அகவும், மலி பொங்கர், |
|
மந்தி ஆட, மா விசும்பு உகந்து |
|
முழங்கு கால் பொருத மரம் பயில் காவின், |
335 |
இயங்கு புனல் கொழித்த வெண் தலைக் குவவு
மணல் |
|
கான் பொழில் தழீஇய அடைகரைதோறும், |
|
தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய், |
|
கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல்,
|
|
அவிர் அறல், வையைத் துறை துறை தோறும் |
340 |
பல் வேறு பூத் திரள் தண்டலை சுற்றி, |
|
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் |
|
அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல்
|
|
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா |
|
விளங்கு பெருந் திருவின் மான விறல் வேள்
|
|
அழும்பில் அன்ன, நாடு இழந்தனரும், |
345 |
கொழும் பல் பதிய குடி இழந்தனரும், |
|
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த, |
|
அண்ணல் யானை, அடு போர் வேந்தர் |
|
இன் இசை முரசம் இடைப் புலத்து ஒழிய, |
|
பல் மாறு ஓட்டி, பெயர் புறம் பெற்று, |
350 |
மண் உற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின், |
|
விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை, |
|
தொல் வலி நிலைஇய, அணங்குடை நெடு நிலை, |
|
நெய் படக் கரிந்த திண் போர்க் கதவின்,
|
|
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு, |
355 |
வையை அன்ன வழக்குடை வாயில், |
|
வகை பெற எழுந்து வானம் மூழ்கி, |
|
சில்காற்று இசைக்கும் பல் புழை நல் இல், |
|
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
|
|
பல் வகைக் கொடிகள்
|
|
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப, |
360 |
மா கால் எடுத்த முந்நீர் போல |
|
முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவல, |
|
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு, இமிழ் இசை |
|
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை, |
|
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து, |
365 |
சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல் கொடி, |
|
வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள, |
|
நாள்தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி, |
|
நீர் ஒலித்தன்ன நிலவு வேல் தானையொடு |
|
புலவுப் படக் கொன்று, மிடை தோல் ஓட்டி, |
370 |
புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி, |
|
கள்ளின் களி நவில் கொடியொடு, நன் பல |
|
பல் வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇ, |
|
பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க
|
|
நால் வகைப் படைகளின் இயக்கம்
|
|
பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின், |
375 |
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ, இதை புடையூ, |
|
கூம்பு முதல் முருங்க எற்றி, காய்ந்து
உடன் |
|
கடுங் காற்று எடுப்ப, கல்
பொருதுஉரை இ, |
|
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய்
போல, |
|
இரு தலைப் பணிலம் ஆர்ப்ப,
சினம் சிறந்து, |
380 |
கோலோர்க் கொன்று, மேலோர் வீசி, |
|
மென் பிணி வன் தொடர் பேணாது,
காழ் சாய்த்து, |
|
கந்து நீத்து உழிதரும் கடாஅ
யானையும்; |
|
அம் கண் மால் விசும்பு புதைய,
வளி போழ்ந்து, |
|
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத்
திரிதரும் |
385 |
செங் கால் அன்னத்துச் சேவல்
அன்ன, |
|
குரூஉ மயிர்ப் புரவி உராலின்,
பரி நிமிர்ந்து, |
|
கால் எனக் கடுக்கும் கவின்
பெறு தேரும்; |
|
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்,
|
|
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய, |
390 |
கொடி படு சுவல விடு மயிர்ப்
புரவியும்; |
|
வேழத்து அன்ன வெரு வரு செலவின், |
|
கள் ஆர் களமர் இருஞ் செரு
மயக்கமும்; |
|
அரியவும் பெரியவும், வருவன
பெயர்தலின் |
|
நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல்
|
|
தீம் புழல் வல்சிக் கழல் கால் மழவர் |
395 |
பூந் தலை முழவின் நோன் தலை
கடுப்ப, |
|
பிடகைப் பெய்த கமழ் நறும்
பூவினர், |
|
பல வகை விரித்த எதிர் பூங்
கோதையர், |
|
பலர் தொகுபு இடித்த தாது உகு
சுண்ணத்தர், |
|
தகை செய் தீம் சேற்று இன்
நீர்ப் பசுங் காய், |
400 |
நீடு கொடி இலையினர், கோடு
சுடு நூற்றினர், |
|
இரு தலை வந்த பகை முனை கடுப்ப, |
|
இன் உயிர் அஞ்சி, இன்னா வெய்து
உயிர்த்து, |
|
ஏங்குவனர் இருந்து, அவை நீங்கிய
பின்றை, |
|
பல் வேறு பண்ணியம் தழீஇத்
திரி விலைஞர், |
405 |
மலை புரை மாடத்துக் கொழு நிழல்
இருத்தர |
|
முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல்
|
|
இருங் கடல் வான் கோடு புரைய, வாருற்றுப் |
|
பெரும் பின்னிட்ட வால் நரைக்
கூந்தலர், |
|
நன்னர் நலத்தர், தொல் முது
பெண்டிர் |
|
செந் நீர்ப் பசும் பொன் புனைந்த
பாவை |
410 |
செல் சுடர்ப் பசு வெயில் தோன்றியன்ன |
|
செய்யர், செயிர்த்த நோக்கினர்,
மடக் கண், |
|
ஐஇய கலுழும் மாமையர், வை எயிற்று |
|
வார்ந்த, வாயர், வணங்கு இறைப்
பணைத் தோள், |
|
சோர்ந்து உகுவன்ன வயக்குறு
வந்திகை, |
415 |
தொய்யில் பொறித்த சுணங்கு
எதிர் இள முலை, |
|
மை உக்கன்ன மொய் இருங் கூந்தல், |
|
மயில் இயலோரும், மட மொழியோரும், |
|
கைஇ, மெல்லிதின் ஒதுங்கி,
கை எறிந்து, |
|
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப, |
420 |
புடை அமை பொலிந்த வகை அமை
செப்பில் |
|
காமர் உருவின் தாம் வேண்டு
பண்ணியம் |
|
கமழ் நறும் பூவொடு மனைமனை
மறுக |
|
திருவிழாக் காட்சிகள்
|
|
ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல்
|
|
மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது, |
|
கரை பொருது இரங்கும் முந்நீர்
போல, |
425 |
கொளக் கொளக் குறையாது, தரத்
தர மிகாது, |
|
கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி, |
|
ஆடு துவன்று விழவின், நாடு
ஆர்த்தன்றே |
|
மாடம் பிறங்கிய மலி புகழ்க்
கூடல், |
|
நாள்அங்காடி நனந் தலைக் கம்பலை. |
430 |
செல்வர்கள் செல்லும் நிலை
|
|
வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச் |
|
செக்கர் அன்ன, சிவந்து நுணங்கு
உருவின், |
|
கண் பொருபு உகூஉம் ஒண் பூங்
கலிங்கம், |
|
பொன் புனை வாளொடு பொலியக்
கட்டி, |
|
திண் தேர்ப் பிரம்பின் புரளும்
தானை, |
435 |
கச்சம் தின்ற கழல் தயங்கு
திருந்து அடி, |
|
மொய்ம்பு இறந்து திரிதரும்
ஒரு பெருந் தெரியல், |
|
மணி தொடர்ந்தன்ன ஒண் பூங்
கோதை, |
|
அணி கிளர் மார்பின் ஆரமொடு
அளைஇ, |
|
கால் இயக்கு அன்ன கதழ் பரி
கடைஇ, |
440 |
காலோர் காப்ப, கால் எனக் கழியும் |
|
வான வண் கை வளம் கெழு செல்வர் |
|
நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர்
|
|
நாள் மகிழ் இருக்கை காண்மார், பூணொடு |
|
தெள் அரிப் பொன் சிலம்பு ஒலிப்ப,
ஒள் அழல் |
|
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர்
இழை, |
445 |
அணங்கு வீழ்வு அன்ன, பூந்
தொடி மகளிர், |
|
மணம் கமழ் நாற்றம் தெரு உடன்
கமழ, |
|
ஒண் குழை திகழும் ஒளி கெழு
திரு முகம் |
|
திண் காழ் ஏற்ற வியல் இரு
விலோதம், |
|
தெண் கடல் திரையின், அசைவளி
புடைப்ப, |
450 |
நிரை நிலை மாடத்து அரமியம்தோறும், |
|
மழை மாய் மதியின், தோன்றுபு
மறைய |
|
கோயில்களில் அந்தி விழா
|
|
நீரும் நிலனும் தீயும் வளியும் |
|
மாக விசும்போடு ஐந்து உடன்
இயற்றிய |
|
மழு வாள் நெடியோன் தலைவன்
ஆக, |
455 |
மாசு அற விளங்கிய யாக்கையர்,
சூழ் சுடர் |
|
வாடாப் பூவின், இமையா நாட்டத்து, |
|
நாற்ற உணவின், உரு கெழு பெரியோர்க்கு, |
|
மாற்று அரு மரபின் உயர் பலி
கொடுமார், |
|
அந்தி விழவில் தூரியம் கறங்க |
460 |
பௌத்தப் பள்ளி
|
|
திண் கதிர் மதாணி, ஒண் குறுமாக்களை, |
|
ஓம்பினர்த் தழீஇ, தாம் புணர்ந்து
முயங்கி, |
|
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்கு, |
|
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
|
|
காமர் கவினிய பேர் இளம் பெண்டிர், |
465 |
பூவினர், புகையினர், தொழுவனர்,
பழிச்சிச் |
|
சிறந்து புறங்காக்கும் கடவுள்
பள்ளியும் |
|
அந்தணர் பள்ளி
|
|
சிறந்த வேதம் விளங்கப் பாடி, |
|
விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு
புணர்ந்து, |
|
நிலம் அமர் வையத்து ஒரு தாம்
ஆகி, |
470 |
உயர் நிலை உலகம் இவண் நின்று
எய்தும் |
|
அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின், |
|
பெரியோர் மேஎய், இனிதின் உறையும் |
|
குன்று குயின்றன்ன அந்தணர்
பள்ளியும் |
|
அமணப் பள்ளி
|
|
வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் |
475 |
பூவும் புகையும் சாவகர் பழிச்ச, |
|
சென்ற காலமும், வரூஉம் அமயமும், |
|
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு
நன்கு உணர்ந்து, |
|
வானமும் நிலனும் தாம் முழுது
உணரும், |
|
சான்ற கொள்கை, சாயா யாக்கை, |
480 |
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர்,
நோன்மார், |
|
கல் பொளிந்தன்ன இட்டு வாய்க்
கரண்டைப் |
|
பல் புரிச் சிமிலி நாற்றி,
நல்கு வர, |
|
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்து,
|
|
செம்பு இயன்றன்ன செஞ் சுவர்
புனைந்து, |
485 |
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு
உயர்ந்து, ஓங்கி, |
|
இறும்பூது சான்ற நறும் பூஞ்
சேக்கையும் |
|
குன்று பல குழீஇப் பொலிவன
தோன்ற; |
|
அறம் கூறு அவையம்
|
|
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி, |
|
செற்றமும் உவகையும் செய்யாது
காத்து, |
490 |
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து
ஆகி, |
|
சிறந்த கொள்கை அறம் கூறு அவையமும் |
|
காவிதி மாக்கள்
|
|
நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து, |
|
ஆவுதி மண்ணி, அவிர் துகில்
முடித்து, |
|
மா விசும்பு வழங்கும் பெரியோர்
போல, |
495 |
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து
அடக்கி, |
|
அன்பும் அறனும் ஒழியாது காத்து, |
|
பழி ஒரீஇ உயர்ந்து, பாய் புகழ்
நிறைந்த |
|
செம்மை சான்ற காவிதி மாக்களும்
|
|
பண்டங்கள் விற்கும் வணிகர்
|
|
அற நெறி பிழையாது, ஆற்றின் ஒழுகி, |
500 |
குறும் பல் குழுவின் குன்று
கண்டன்ன |
|
பருந்து இருந்து உகக்கும்
பல் மாண் நல் இல், |
|
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து
கவினி, |
|
மலையவும், நிலத்தவும், நீரவும்,
பிறவும், |
|
பல் வேறு திரு மணி, முத்தமொடு,
பொன் கொண்டு, |
505 |
சிறந்த தேஎத்துப் பண்ணியம்
பகர்நரும் |
|
நாற் பெருங் குழு
|
|
மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள், |
|
பழையன், மோகூர் அவையகம் விளங்க, |
|
நான் மொழிக் கோசர் தோன்றியன்ன,
|
|
தாம் மேஎந் தோன்றிய நாற் பெருங்
குழுவும் |
510 |
பல்வேறு தொழிலாளர்களின்
கூட்டம்
|
|
கோடு போழ் கடைநரும், திரு மணி குயினரும், |
|
சூடுறு நன் பொன் சுடர் இழை
புனைநரும், |
|
பொன்னுரை காண்மரும், கலிங்கம்
பகர்நரும், |
|
செம்பு நிறை கொண்மரும், வம்பு
நிறை முடிநரும், |
|
பூவும் புகையும் ஆயும் மாக்களும், |
515 |
எவ் வகைச் செய்தியும் உவமம்
காட்டி, |
|
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த
நோக்கின் |
|
கண்ணுள் வினைஞரும், பிறரும்,
கூடி, |
|
தெண் திரை அவிர் அறல் கடுப்ப,
ஒண் பல் |
|
குறியவும் நெடியவும் மடி தரூஉ
விரித்து, |
520 |
சிறியரும் பெரியரும் கம்மியர்
குழீஇ, |
|
நால் வேறு தெருவினும், கால்
உற நிற்றர |
|
பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம்
|
|
கொடும் பறைக் கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும், |
|
தண் கடல் நாடன், ஒண் பூங்
கோதை |
|
பெரு நாள் இருக்கை, விழுமியோர்
குழீஇ, |
525 |
விழைவு கொள் கம்பலை கடுப்ப |
|
உணவு வகைகள்
|
|
பலவுடன், |
|
சேறும் நாற்றமும் பலவின் சுளையும், |
|
வேறு படக் கவினிய தேம் மாங்
கனியும், |
|
பல் வேறு உருவின் காயும்,
பழனும், |
|
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு
கவினி, |
530 |
மென் பிணி அவிழ்ந்த குறு முறி
அடகும், |
|
அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக்
கடிகையும், |
|
புகழ் படப் பண்ணிய பேர் ஊன்
சோறும், |
|
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு,
பிறவும், |
|
இன் சோறு தருநர் பல் வயின்
நுகர |
535 |
அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி
|
|
வால் இதை எடுத்த வளி தரு வங்கம், |
|
பல் வேறு பண்டம் இழிதரும்
பட்டினத்து |
|
ஒல்லென் இமிழ் இசை மான, கல்லென |
|
நனந் தலை வினைஞர் கலம் கொண்டு
மறுக, |
|
பெருங் கடல் குட்டத்துப் புலவுத்
திரை ஓதம் |
540 |
இருங் கழி மருவிப் பாய, பெரிது
எழுந்து, |
|
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின், |
|
பல் வேறு புள்ளின் இசை எழுந்தற்றே, |
|
அல்அங்காடி அழி தரு கம்பலை.
|
|
இரவுக் கால நிலை
|
|
ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க, சினம் தணிந்து, |
545 |
சென்ற ஞாயிறு, நன் பகல் கொண்டு, |
|
குடமுதல் குன்றம் சேர, குணமுதல், |
|
நாள் முதிர் மதியம் தோன்றி,
நிலா விரிபு, |
|
பகல் உரு உற்ற இரவு வர, நயந்தோர்
|
|
காதல் இன் துணை புணர்மார்,
ஆய் இதழ்த் |
550 |
தண் நறுங் கழுநீர் துணைப்ப,
இழை புனையூஉ, |
|
நல் நெடுங் கூந்தல் நறு விரை
குடைய, |
|
நரந்தம் அரைப்ப, நறுஞ் சாந்து
மறுக, |
|
மென் நூல் கலிங்கம் கமழ் புகை
மடுப்ப, |
|
பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு
மகளிர் |
555 |
நெடுஞ் சுடர் விளக்கம் கொளீஇ,
நெடு நகர் |
|
எல்லை எல்லாம், நோயொடு புகுந்து, |
|
கல்லென் மாலை, நீங்க |
|
பரத்தையரது வாழ்க்கை
|
|
நாணுக் கொள, |
|
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடைச்
சீறியாழ், |
|
தாழ் பெயல் கனை குரல் கடுப்ப,
பண்ணுப் பெயர்த்து, |
560 |
வீழ் துணை தழீஇ, வியல் விசும்பு
கமழ, |
|
நீர் திரண்டன்ன கோதை பிறக்கு
இட்டு, |
|
ஆய் கோல் அவிர் தொடி விளங்க
வீசி, |
|
போது அவிழ் புது மலர் தெரு
உடன் கமழ, |
|
மே தகு தகைய மிகு நலம் எய்தி, |
565 |
பெரும் பல் குவளைச் சுரும்பு
படு பல் மலர், |
|
திறந்து மோந்தன்ன சிறந்து
கமழ் நாற்றத்து, |
|
கொண்டல் மலர்ப் புதல் மானப்
பூ வேய்ந்து, |
|
நுண் பூண் ஆகம் வடுக் கொள
முயங்கி, |
|
மாயப் பொய் பல கூட்டி, கவவுக்
கரந்து, |
570 |
சேயரும் நணியரும் நலன் நயந்து
வந்த |
|
இளம் பல் செல்வர் வளம் தப
வாங்கி, |
|
நுண் தாது உண்டு, வறும் பூத்
துறக்கும், |
|
மென் சிறை வண்டினம் மான, புணர்ந்தோர்
|
|
நெஞ்சு ஏமாப்ப, இன் துயில்
துறந்து, |
575 |
பழம் தேர் வாழ்க்கைப் பறவை
போல, |
|
கொழுங் குடிச் செல்வரும் பிறரும்
மேஎய, |
|
மணம் புணர்ந்து ஓங்கிய, அணங்குடை
நல் இல், |
|
ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை
மகளிர் |
|
ஒண் சுடர் விளக்கத்து, பலர்
உடன் துவன்றி, |
580 |
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர்
ஆடும் |
|
வானவ மகளிர் மான, கண்டோர் |
|
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி
மகளிர், |
|
யாம நல் யாழ் நாப்பண் நின்ற
|
|
முழவின் மகிழ்ந்தனர் ஆடி,
குண்டு நீர்ப் |
585 |
பனித்துறைக் குவவு மணல் முனைஇ,
மென் தளிர்க் |
|
கொழுங் கொம்பு கொழுதி, நீர்
நனை மேவர, |
|
நெடுந் தொடர்க் குவளை வடிம்பு
உற அடைச்சி, |
|
மணம் கமழ் மனைதொறும் பொய்தல்
அயர |
|
ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்
|
|
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் |
590 |
மாயோன் மேய ஓண நல் நாள், |
|
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த, |
|
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்
கை, |
|
மறம் கொள் சேரி மாறு பொரு
செருவில், |
|
மாறாது உற்ற வடுப் படு நெற்றி, |
595 |
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும்
புகல் மறவர் |
|
கடுங் களிறு ஓட்டலின், காணுநர்
இட்ட |
|
நெடுங் கரைக் காழகம் நிலம்
பரல் உறுப்ப, |
|
கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து
திரிதர |
|
புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்
|
|
கணவர் உவப்ப, புதல்வர்ப் பயந்து, |
600 |
பணைத்து ஏந்து இள முலை அமுதம்
ஊற, |
|
புலவுப் புனிறு தீர்ந்து,
பொலிந்த சுற்றமொடு, |
|
வள மனை மகளிர் குளநீர் அயர |
|
சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று
தெய்வத்திற்கு மடை கொடுத்தல்
|
|
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி, |
|
குரல் புணர் நல் யாழ் முழவோடு
ஒன்றி, |
605 |
நுண் நீர் ஆகுளி இரட்ட, பலவுடன், |
|
ஒண் சுடர் விளக்கம் முந்துற,
மடையொடு, |
|
நல் மா மயிலின் மென்மெல இயலி, |
|
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
|
|
பெருந் தோள் சாலினி மடுப்ப |
610 |
வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும்
|
|
ஒரு சார், |
|
அருங் கடி வேலன் முருகொடு
வளைஇ, |
|
அரிக் கூடு இன் இயம் கறங்க,
நேர் நிறுத்து, |
|
கார் மலர்க் குறிஞ்சி சூடி,
கடம்பின் |
|
சீர் மிகு நெடு வேள் பேணி,
தழூஉப் பிணையூஉ, |
|
மன்றுதொறும் நின்ற குரவை |
615 |
இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்
|
|
சேரிதொறும், |
|
உரை யும்
பாட்டும் ஆட்டும் விரைஇ, |
|
வேறு வேறு கம்பலை வெறி கொள்பு
மயங்கி, |
|
பேர் இசை நன்னன் பெறும் பெயர்
நன்னாள், |
|
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு, |
|
முந்தை யாமம் சென்ற பின்றை
|
620 |
இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை
|
|
பணிலம் கலி அவிந்து அடங்க, காழ் சாய்த்து, |
|
நொடை நவில் நெடுங் கடை அடைத்து,
மட மதர், |
|
ஒள் இழை, மகளிர் பள்ளி அயர, |
|
நல் வரி இறாஅல் புரையும் மெல்
அடை, |
|
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை
விசயம் |
625 |
கவவொடு பிடித்த வகை அமை மோதகம், |
|
தீம் சேற்றுக் கூவியர் தூங்குவனர்
உறங்க, |
|
விழவின் ஆடும் வயிரியர் மடிய, |
|
பாடு ஆன்று அவிந்த பனிக் கடல்
புரைய, |
|
பாயல் வளர்வோர் கண் இனிது
மடுப்ப |
630 |
மூன்றாம் சாம நிகழ்ச்சிகள்
|
|
பானாள் கொண்ட கங்குல் இடையது |
|
பேயும் அணங்கும் உருவு கொண்டு,
ஆய் கோல் |
|
கூற்றக் கொல் தேர், கழுதொடு
கொட்ப, |
|
இரும் பிடி மேஎந் தோல் அன்ன
இருள் சேர்பு, |
|
கல்லும் மரனும் துணிக்கும்
கூர்மைத் |
635 |
தொடலை வாளர், தொடுதோல் அடியர், |
|
குறங்கிடைப் பதித்த கூர் நுனைக்
குறும்பிடி, |
|
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு
அறல், |
|
நிறம் கவர்பு புனைந்த நீலக்
கச்சினர், |
|
மென் நூல் ஏணிப் பல் மாண்
சுற்றினர், |
640 |
நிலன் அகழ் உளியர், கலன் நசைஇக்
கொட்கும், |
|
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி, |
|
வயக் களிறு பார்க்கும் வயப்
புலி போல, |
|
துஞ்சாக் கண்ணர், அஞ்சாக்
கொள்கையர், |
|
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர்,
செறிந்த |
645 |
நூல் வழிப் பிழையா நுணங்கு
நுண் தேர்ச்சி |
|
ஊர் காப்பாளர், ஊக்கருங் கணையினர், |
|
தேர் வழங்கு தெருவில் நீர்
திரண்டு ஒழுக |
|
மழை அமைந்து உற்ற அரைநாள்
அமயமும், |
|
அசைவிலர் எழுந்து, நயம் வந்து
வழங்கலின், |
650 |
கடவுள் வழங்கும் கையறு கங்குலும், |
|
அச்சம் அறியாது ஏமம் ஆகிய |
|
மற்றை யாமம் பகல் உறக் கழிப்பி |
|
விடியல்காலத்தில் மதுரை மாநகர்
|
|
போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத் |
|
தாது உண் தும்பி போது முரன்றாங்கு,
|
655 |
ஓதல் அந்தணர் வேதம் பாட, |
|
சீர் இனிது கொண்டு, நரம்பு
இனிது இயக்கி, |
|
யாழோர் மருதம் பண்ண, காழோர் |
|
கடுங் களிறு கவளம் கைப்ப,
நெடுந் தேர்ப் |
|
பணை நிலைப் புரவி புல் உணாத்
தெவிட்ட, |
660 |
பல் வேறு பண்ணியக் கடை மெழுக்கு
உறுப்ப, |
|
கள்ளோர் களி நொடை நுவல, இல்லோர் |
|
நயந்த காதலர் கவவுப் பிணித்
துஞ்சி, |
|
புலர்ந்து விரி விடியல் எய்த,
விரும்பி, |
|
கண் பொரா எறிக்கும் மின்னுக்
கொடி புரைய, |
665 |
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப
இயலி, |
|
திண் சுவர் நல் இல் கதவம்
கரைய, |
|
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் |
|
பழஞ் செருக்காளர் தழங்கு குரல்
தோன்ற, |
|
சூதர் வாழ்த்த, மாகதர் நுவல,
|
670 |
வேதாளிகரொடு, நாழிகை இசைப்ப, |
|
இமிழ் முரசு இரங்க, ஏறு மாறு
சிலைப்ப, |
|
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப, |
|
யானையங்குருகின் சேவலொடு காமர் |
|
அன்னம் கரைய, அணி மயில் அகவ,
|
675 |
பிடி புணர் பெருங் களிறு முழங்க,
முழு வலிக் |
|
கூட்டு உறை வய மாப் புலியொடு
குழும, |
|
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின், |
|
மின்னு நிமிர்ந்தனையர் ஆகி,
நறவு மகிழ்ந்து, |
|
மாண் இழை மகளிர், புலந்தனர்,
பரிந்த |
680 |
பரூஉக் காழ் ஆரம் சொரிந்த
முத்தமொடு, |
|
பொன் சுடு நெருப்பின் நிலம்
உக்கென்ன, |
|
அம் மென் குரும்பைக் காய்
படுபு, பிறவும், |
|
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு
ஆர்ப்ப, |
|
மென் பூஞ் செம்மலொடு நன் கலம்
சீப்ப, |
685 |
இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை |
|
மதுரையின் சிறப்பு
|
|
மை படு பெருந் தோள் மழவர் ஓட்டி, |
|
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து
கோட்டு யானை, |
|
பகைப் புலம் கவர்ந்த பாய்
பரிப் புரவி, |
|
வேல் கோல் ஆக, ஆள் செல நூறி,
|
690 |
காய் சின முன்பின் கடுங் கண்
கூளியர் |
|
ஊர் சுடு விளக்கின், தந்த
ஆயமும், |
|
நாடுடை நல் எயில் அணங்குடைத்
தோட்டி, |
|
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப்
பழிச்சி |
|
நாள் தர வந்த விழுக் கலம்,
அனைத்தும், |
695 |
கங்கை அம் பேர் யாறு கடல்
படர்ந்தாஅங்கு |
|
அளந்து கடை அறியா வளம் கெழு
தாரமொடு, |
|
புத்தேள் உலகம் கவினிக் காண்வர, |
|
மிக்குப் புகழ் எய்திய பெரும்
பெயர் மதுரை |
|
இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை
|
|
சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ |
700 |
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த
காவில், |
|
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு
கதிர் ஞாயிற்று |
|
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன, |
|
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு
இழை |
|
நிலம் விளக்குறுப்ப, மே தகப்
பொலிந்து, |
705 |
மயில் ஓரன்ன சாயல், மாவின் |
|
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர்ப்
புறத்து |
|
ஈர்க்கின் அரும்பிய திதலையர்,
கூர் எயிற்று |
|
ஒண் குழை புணரிய வண் தாழ்
காதின், |
|
கடவுள் கயத்து அமன்ற சுடர்
இதழ்த் தாமரைத் |
710 |
தாது படு பெரும் போது புரையும்
வாள் முகத்து, |
|
ஆய் தொடி மகளிர் நறுந் தோள்
புணர்ந்து, |
|
கோதையின் பொலிந்த சேக்கைத்
துஞ்சி |
|
காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல்
|
|
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து, |
|
திண் காழ் ஆரம் நீவி, கதிர்
விடும் |
715 |
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின், |
|
வரிக் கடைப் பிரசம் மூசுவன
மொய்ப்ப, |
|
எருத்தம் தாழ்ந்த விரவுப்
பூந் தெரியல், |
|
பொலம் செயப் பொலிந்த நலம்
பெறு விளக்கம் |
|
வலி கெழு தடக் கைத் தொடியொடு
சுடர் வர, |
720 |
சோறு அமைவு உற்ற நீருடைக்
கலிங்கம், |
|
உடை அணி பொலியக் குறைவு இன்று
கவைஇ, |
|
வல்லோன் தைஇய வரிப் புனை பாவை |
|
முருகு இயன்றன்ன உருவினை ஆகி |
|
வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்
|
|
வரு புனல் கல் சிறை கடுப்ப, இடை அறுத்து, |
725 |
ஒன்னார் ஓட்டிய செருப் புகல்
மறவர் |
|
வாள் வலம் புணர்ந்த நின் தாள்
வலம் வாழ்த்த |
|
சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்
|
|
'வில்லைக் கவைஇக், கணைதாங்கு மார்பின் |
|
மா தாங்கு எறுழ்த் தோள் மறவர்த்
தம்மின்; |
|
கல் இடித்து இயற்றிய இட்டு
வாய்க் கிடங்கின |
730 |
நல் எயில் உழந்த செல்வர்த்
தம்மின்; |
|
கொல் ஏற்றுப் பைந் தோல் சீவாது
போர்த்த |
|
மாக் கண் முரசம் ஓவு இல கறங்க, |
|
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண், |
|
பெரு நல் யானை போர்க்களத்து
ஒழிய, |
735 |
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த்
தம்மின்; |
|
புரையோர்க்குத் தொடுத்த பொலம்
பூந் தும்பை, |
|
"நீர் யார்?" என்னாது,
முறை கருதுபு சூட்டி, |
|
காழ் மண்டு எஃகமொடு கணை அலைக்
கலங்கி, |
|
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை
கவயத்து, |
740 |
வானத்து அன்ன வள நகர் பொற்ப, |
|
நோன் குறட்டு அன்ன ஊன் சாய்
மார்பின், |
|
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்; |
|
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த |
|
புலர்ந்த சாந்தின் விரவுப்
பூந் தெரியல் |
745 |
பெருஞ் செய் ஆடவர்த் தம்மின்;
பிறரும் |
|
யாவரும் வருக; ஏனோரும் தம்!'
என |
|
மன்னனது பெருங் கொடை
|
|
'வரையா வாயில் செறாஅது' இருந்து, |
|
'பாணர் வருக! பாட்டியர் வருக! |
|
யாணர்ப் புலவரொடு வயிரியர்
வருக!" என |
750 |
இருங் கிளை புரக்கும் இரவலர்க்கு
எல்லாம் |
|
கொடுஞ்சி நெடுந் தேர் களிற்றொடும்
வீசி |
|
மன்னனை வாழ்த்துதல்
|
|
களம்தோறும் கள் அரிப்ப, |
|
மரம்தோறும் மை வீழ்ப்ப, |
|
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய,
|
755 |
நெய் கனிந்து வறை ஆர்ப்ப, |
|
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின் |
|
பரந்து தோன்றா, வியல் நகரால், |
|
பல் சாலை முது குடுமியின், |
|
நல் வேள்வித் துறை போகிய |
760 |
தொல் ஆணை நல் ஆசிரியர் |
|
புணர் கூட்டு உண்ட புகழ் சால்
சிறப்பின், |
|
நிலம் தரு திருவின் நெடியோன்
போல, |
|
வியப்பும், சால்பும், செம்மை
சான்றோர் |
|
பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின்
தோன்றி, |
765 |
அரிய தந்து குடி அகற்றி, |
|
பெரிய கற்று இசை விளக்கி, |
|
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும், |
|
பல் மீன் நடுவண் திங்கள் போலவும், |
|
பூத்த சுற்றமொடு பொலிந்து,
இனிது விளங்கி, |
770 |
பொய்யா நல் இசை நிறுத்த புனை
தார்ப் |
|
பெரும் பெயர் மாறன் தலைவனாக, |
|
கடந்து அடு வாய்வாள் இளம்
பல் கோசர், |
|
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி
கேட்ப, |
|
பொலம் பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த
|
775 |
மறம் மிகு சிறப்பின் குறு
நில மன்னர் |
|
அவரும், பிறரும், துவன்றி, |
|
பொற்பு விளங்கு புகழ் அவை
நிற் புகழ்ந்து ஏத்த, |
|
இலங்கு இழை மகளிர் பொலங் கலத்து
ஏந்திய |
|
மணம் கமழ் தேறல் மடுப்ப, நாளும்
|
780 |
மகிழ்ந்து இனிது உறைமதி, பெரும! |
|
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே! |
|
இதன்
பொருள் |
தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை
மாங்குடி மருதனார் பாடியது.
|
மதுரைக் காஞ்சி முற்றும்
|
|
தனிப் பாடல்கள் |
|
பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல் |
|
திங்கள் நெடுங் குடையின் கீழானை,
- அங்கு இரந்து |
|
நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி
போய், நானிலத்தோர் |
|
தாம் வேண்டும் கூடல் தமிழ்.
|
1 |
சொல் என்னும் பூம் போது தோற்றி,
பொருள் என்னும் |
|
நல் இருந் தீம் தாது நாறுதலால்,
- மல்லிகையின் |
|
வண்டு ஆர் கமழ் தாமம் அன்றேமலையாத |
|
தண் தாரான் கூடல் தமிழ்? |
2 |