கோவலர் வாடையால் துன்புறுதல் | |
இதன் பொருள் |
வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ, |
|
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென, |
|
ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர் |
|
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி, |
|
புலம் பெயர் புலம்பொடு கலங்கி, கோடல் |
5 |
நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ, |
|
மெய்க் கொள் பெரும் பனி நலிய, பலருடன் |
|
கைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க |
|
கூதிர்க் கால நிலை
| |
மா மேயல் மறப்ப, மந்தி கூர, |
|
பறவை படிவன வீழ, கறவை |
10 |
கன்று கோள் ஒழியக் கடிய வீசி, |
|
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள் |
|
ஊரினது செழிப்பு
| |
புன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூ, |
|
பொன் போல் பீரமொடு, புதல்புதல் மலர; |
|
பைங் காற் கொக்கின் மென் பறைத் தொழுதி, |
15 |
இருங் களி பரந்த ஈர வெண் மணல், |
|
செவ் வரி நாரையோடு, எவ் வாயும் கவர |
|
கயல் அறல் எதிர, கடும் புனல் சாஅய்: |
|
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை |
|
அகல் இரு விசும்பில் துவலை கற்ப; |
20 |
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த |
|
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க; |
|
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் |
|
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெருங் குலை, |
|
நுண் நீர் தெவிள வீங்கி, புடை திரண்டு, |
25 |
தெண் நீர்ப் பசுங் காய், சேறு கொள முற்ற; |
|
நளி கொள் சிமைய, விரவு மலர், வியன் காக் |
|
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க |
|
முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்
|
|
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர், |
|
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், |
30 |
படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள், |
|
முடலை யாக்கை, முழு வலி மாக்கள் |
|
வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, |
|
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து, |
|
இரு கோட்டு அறுவையர், வேண்டு வயின் திரிதர |
35 |
மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்
|
|
வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள், |
|
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல், |
|
பூங் குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக் கண், |
|
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த |
|
செவ்வி அரும்பின், பைங் கால் பித்திகத்து, |
40 |
அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து, |
|
இரும்பு செய் விளக்கின் ஈர்ந் திரிக் கொளீஇ, |
|
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது, |
|
மல்லல் ஆவணம் மாலை அயர |
|
கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்
|
|
மனை உறை புறவின் செங் கால் சேவல் |
45 |
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது, |
|
இரவும் பகலும் மயங்கி, கையற்று, |
|
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப; |
|
கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர், |
|
கொள் உறழ் நறுங் கல், பல கூட்டு மறுக; |
50 |
வடவர் தந்த வான் கேழ் வட்டம் |
|
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப; |
|
கூந்தல், மகளிர் கோதை புனையார், |
|
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார், |
|
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, |
55 |
இருங் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப, |
|
கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த |
|
செங் கேழ் வட்டம் சுருக்கி; கொடுந் தறி, |
|
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க; |
|
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின், |
60 |
வேனில் பள்ளித் தென்வளி தரூஉம் |
|
நேர் வாய்க் கட்டளை, திரியாது, திண் நிலைப் |
|
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப; |
|
கல்லென் துவலை தூவலின், யாவரும் |
|
தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், |
65 |
பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆர; |
|
ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார், |
|
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை, |
|
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ, |
|
கருங் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப; |
70 |
காதலர்ப் பிரிந்தோர் புலம்ப; பெயல் கனைந்து, |
|
கூதிர் நின்றன்றால் |
|
அரசியின் அரண்மனை
| |
மனை வகுத்த முறை | |
போதே, மாதிரம்
|
|
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம், |
|
இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு, |
|
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, |
75 |
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு, |
|
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி, |
|
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து- |
|
கோபுர வாயில்
| |
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின், |
|
பரு இரும்பு பிணித்து, செவ்வரக்கு உரீஇ, |
80 |
துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு, |
|
நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்து, |
|
போது அவிழ் குவளைப் புதுத் பிடி கால் அமைத்து |
|
தாழொடு குயின்ற, போர் அமை புணர்ப்பின், |
|
கை வல் கம்மியன் முடுக்கலின், புரை தீர்ந்து, |
85 |
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை, |
|
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக, |
|
குன்று குயின்றன்ன, ஓங்கு நிலை வாயில், |
|
முற்றமும் முன்வாயிலும்
| |
திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின், |
|
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, |
90 |
நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை |
|
குறுங்கால் அன்னமோடு உகளும் முன் கடை, |
|
அரண்மனையில் எழும் ஓசைகள்
| |
பணை நிலை முனைஇய பல் உளைப் புரவி |
|
புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு, |
|
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து, |
95 |
கிம்புரிப் பகு வாய் அம்பணம் நிறைய, |
|
கலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து, அயல |
|
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல் இயல் |
|
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை, |
|
நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் |
100 |
அந்தப்புரத்தின் அமைப்பு
| |
யவனர் இயற்றிய வினை மாண் பாவை |
|
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து, |
|
பரூஉத் திரி கொளீஇய குரூஉத் தலை நிமிர் எரி, |
|
அறு அறு காலைதோறு, அமைவரப் பண்ணி, |
|
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க; |
105 |
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது, |
|
ஆடவர் குறுகா அருங் கடி வரைப்பின், |
|
வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு |
|
வில் கிடந்தன்ன கொடிய, பல் வயின், |
|
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, |
110 |
மணி கண்டன்ன மாத் திரள் திண் காழ், |
|
செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடுஞ் சுவர், |
|
உருவப் பல் பூ ஒரு கொடி வளைஇ, |
|
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் |
|
அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்
|
|
தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள், |
115 |
இகல் மீக்கூறும், ஏந்து எழில் வரி நுதல், |
|
பொருது ஒழி, நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து, |
|
சீரும் செம்மையும் ஒப்ப, வல்லோன் |
|
கூர் உளிக் குயின்ற, ஈர் இலை இடை இடுபு, |
|
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் |
120 |
புடை திரண்டிருந்த குடத்த, இடை திரண்டு, |
|
உள்ளி நோன் முதல் பொருத்தி, அடி அமைத்து, |
|
பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில் |
|
கட்டிலின்மேல் அமைந்த படுக்கை
| |
மடை மாண் நுண் இழை பொலிய, தொடை மாண்டு,
|
|
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து, |
125 |
புலிப் பொறிக் கொண்ட பூங் கேழ்த் தட்டத்துத் |
|
தகடு கண் புதையக் கொளீஇ, துகள் தீர்ந்து, |
|
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான் |
|
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து |
|
முல்லைப் பல் போது உறழ, பூ நிரைத்து, |
130 |
மெல்லிதின் விரிந்த சேக்கை |
|
படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்
|
|
மேம்பட, |
|
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி |
|
இணை அணை மேம்படப் பாய், அணை இட்டு, |
|
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் |
|
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை, |
135 |
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப் |
|
பின் அமை நெடு வீழ் தாழ, துணை துறந்து, |
|
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி, |
|
நெடு நீர் வார் குழை களைந்தென, குறுங் கண் |
|
வாயுறை அழுத்திய, வறிது வீழ் காதின், |
140 |
பொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை, |
|
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து, |
|
வாளைப் பகு வாய் கடுப்ப வணக்குறுத்து, |
|
செவ் விரல் கொளீஇய செங் கேழ் விளக்கத்து, |
|
பூந் துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல், |
145 |
அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு, |
|
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல் |
|
சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்
|
|
தளிர் ஏர் மேனி, தாய சுணங்கின்,
|
|
அம் பணைத் தடைஇய மென் தோள், முகிழ் முலை, |
|
வம்பு விசித்து யாத்த, வாங்கு சாய் நுசுப்பின், |
150 |
மெல் இயல் மகளிர்-நல் அடி வருட; |
|
நரை விராவுற்ற நறு மென் கூந்தல் |
|
செம் முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ, |
|
குறியவும் நெடியவும் உரை
பல பயிற்றி, |
|
'இன்னே வருகுவர் இன் துணையோர்' என, |
155 |
உகத்தவை மொழியவும் |
|
தலைவியின் வருத்த மிகுதி
| |
ஒல்லாள், மிகக் கலுழ்ந்து |
|
நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால், |
|
ஊறா வறு முலை கொளீஇய, கால் திருத்தி, |
|
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை, |
|
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, |
160 |
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து, |
|
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய, |
|
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா, |
|
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி, |
|
செவ் விரல் கடைக் கண் சேர்த்தி, சில தெறியா, |
165 |
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு |
|
இன்னா அரும் படர் தீர, விறல் தந்து, |
|
இன்னே முடிகதில் அம்ம |
|
பாசறையில் அரசன் நிலை
| |
மின் அவிர் |
|
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை |
|
நீள் திரள் தடக் கை நிலமிசைப் புரள, |
170 |
களிறு களம் படுத்த பெருஞ் செய் ஆடவர், |
|
ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து, |
|
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கி, |
|
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய, நன் பல் |
|
பாண்டில் விளக்கில், பரூஉச் சுடர் அழல, |
175 |
வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு |
|
முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர், |
|
மணி புறத்து இட்ட மாத் தாள் பிடியொடு |
|
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா |
|
இருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப, |
180 |
புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ, |
|
வாள் தோள் கோத்த வன்கண் காளை |
|
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து, |
|
நூல் கால்யாத்த மாலை வெண் குடை |
|
தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப, |
185 |
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான், |
|
சிலரொடு திரிதரும் வேந்தன், |
|
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே |
|
இதன் பொருள் |
பாண்டியன் நெடுஞ் செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. | |
நெடுநல்வாடை முற்றும்
| |
தனிப் பாடல்
| |
வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ, |
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல் |
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி, |
பகையோடு பாசறை உளான்?
|