தோழி அறத்தொடு நிற்றல் |
இதன் பொருள் |
'அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! ஒள் நுதல், |
|
ஒலி மென் கூந்தல், என் தோழி மேனி |
|
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய் |
|
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும், |
|
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும், |
5 |
வேறு பல் உருவின் கடவுள் பேணி, |
|
நறையும் விரையும் ஓச்சியும், அலவுற்று, |
|
எய்யா மையலை நீயும் வருந்துதி |
|
நல் கவின் தொலையவும், நறுந் தோள் நெகிழவும், |
|
புள் பிறர் அறியவும், புலம்பு வந்து அலைப்பவும், |
10 |
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் |
|
செப்பல் வன்மையின் செறித்து, யான் கடவலின், |
|
தலைவியின் அன்பு மிகுதி |
|
"முத்தினும் மணியினும் பொன்னினும், அத் துணை, |
|
நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும், |
|
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின், |
15 |
மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல், |
|
ஆசு அறு காட்சி ஐயர்க்கும், அந் நிலை, |
|
எளிய என்னார், தொல் மருங்கு அறிஞர்: |
|
மாதரும் மடனும் ஓராங்குத் தணப்ப, |
|
நெடுந் தேர் எந்தை அருங் கடி நீவி, |
20 |
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என, |
|
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ? |
|
ஆற்றின் வாரார் ஆயினும், ஆற்ற |
|
ஏனை உலகத்தும் இயைவதால், நமக்கு" என |
|
மான் அமர் நோக்கம் கலங்கி, கையற்று, |
25 |
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் |
|
மணம் நிகழ்ந்தமையைத் தோழி அறிவித்தல் |
|
இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர் |
|
வினையிடை நின்ற சான்றோர் போல, |
|
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென்; |
|
கொடுப்பின் நன்கு உடைமையும், குடி நிரல் உடைமையும், |
30 |
வண்ணமும், துணையும், பொரீஇ எண்ணாது, |
|
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை |
|
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணரச் |
|
செப்பல் ஆன்றிசின்; சினவாதீமோ! |
|
தினைப்புனம் காத்த வகை |
|
"நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை, |
35 |
முத்து ஆர் மருப்பின் இறங்குகை கடுப்ப, |
|
துய்த் தலை வாங்கிய புனிறு தீர் பெருங் குரல் |
|
நல் கோள் சிறு தினைப் படு புள் ஓப்பி, |
|
எல் பட வருதியர்" என, நீ விடுத்தலின், |
|
கலி கெழு மரமிசைச் சேணோன் இழைத்த |
40 |
புலி அஞ்சு இதணம் ஏறி, அவண, |
|
சாரல் சூரல் தகை பெற வலந்த, |
|
தழலும் தட்டையும் குளிரும், பிறவும், |
|
கிளி கடி மரபின, ஊழ் ஊழ் வாங்கி, |
|
உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து |
45 |
சுனையில் நீராடல் |
|
விசும்பு ஆடு பறவை வீழ் பதிப் படர, |
|
நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு, |
|
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின், |
|
முரசு அதிர்ந்தன்ன இன் குரல் ஏற்றொடு, |
|
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, |
50 |
இன் இசை முரசின், சுடர்ப் பூண், சேஎய் |
|
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின், |
|
மின் மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென, |
|
அண்ணல் நெடுங் கோட்டு இழிதரு தெள் நீர், |
|
அவிர் துகில் புரையும், அவ் வெள் அருவி, |
55 |
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி, |
|
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி, |
|
நளி படு சிலம்பில், பாயம் பாடி, |
|
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம் |
|
பின் இருங் கூந்தல் பிழிவனம் துவரி, |
60 |
உள்ளகம் சிவந்த கண்ணேம், |
|
பூக்களைப் பறித்துப் பாறையில் குவித்தல் |
|
வள் இதழ் |
|
ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், |
|
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, |
|
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, |
|
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், |
65 |
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், |
|
வடவனம், வாகை, வான் பூங் குடசம், |
|
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, |
|
பயினி, வானி, பல் இணர்க் குரவம், |
|
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, |
70 |
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், |
|
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, |
|
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், |
|
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, |
|
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், |
75 |
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, |
|
தில்லை, பாலை, கல் இவர் முல்லை, |
|
குல்லை, பிடவம், சிறுமாரோடம், |
|
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், |
|
தாழை, தளவம், முள் தாள் தாமரை, |
80 |
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, |
|
சேடல், செம்மல், சிறுசெங்குரலி, |
|
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, |
|
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், |
|
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், |
85 |
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, |
|
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, |
|
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, |
|
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், |
|
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, |
90 |
நந்தி, நறவம், நறும் புன்னாகம், |
|
பாரம், பீரம், பைங் குருக்கத்தி, |
|
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, |
|
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, |
|
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், |
95 |
அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன், |
|
மால், அங்கு, உடைய மலிவனம் மறுகி, |
|
வான் கண் கழீஇய அகல் அறைக் குவைஇ, |
|
தழை உடுத்து, மாலை சூடி, அசோகின் நிழலில் இருத்தல் |
|
புள் ஆர் இயத்த விலங்கு மலைச் சிலம்பின், |
|
வள் உயிர்த் தெள் விளி இடைஇடைப் பயிற்றி, |
100 |
கிள்ளை ஓப்பியும், கிளை இதழ் பறியா, |
|
பை விரி அல்குல் கொய்தழை தைஇ, |
|
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை, எம் |
|
மெல் இரு முச்சி, கவின் பெறக் கட்டி, |
|
எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் |
105 |
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக |
|
தலைவனது வருகை |
|
எண்ணெய் நீவிய, சுரி வளர் நறுங் காழ், |
|
தண் நறுங் தகரம் கமழ மண்ணி, |
|
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழா, |
|
காழ் அகில் அம் புகை கொளீஇ, யாழ் இசை |
110 |
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப, தேம் கலந்து |
|
மணி நிறம் கொண்ட மா இருங் குஞ்சியின், |
|
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் |
|
வண்ண வண்ணத்த மலர் ஆய்பு விரைஇய |
|
தண் நறுந் தொடையல், வெண் போழ்க் கண்ணி, |
115 |
நலம் பெறு சென்னி, நாம் உற மிலைச்சி, |
|
பைங் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி |
|
அம் தொடை ஒரு காழ் வளைஇ, செந் தீ |
|
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ, |
|
அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்ப, சாந்து அருந்தி, |
120 |
மைந்து இறை கொண்ட, மலர்ந்து ஏந்து அகலத்து, |
|
தொன்று படு நறுந் தார் பூணொடு பொலிய, |
|
செம் பொறிக்கு ஏற்ற, வீங்கு இறைத் தடக் கையின் |
|
வண்ண வரி வில் ஏந்தி, அம்பு தெரிந்து, |
|
நுண் வினைக் கச்சைத் தயக்கு அறக் கட்டி, |
125 |
இயல் அணிப் பொலிந்த ஈகை வான் கழல் |
|
துயல் வரும் தோறும் திருந்து அடிக் கலாவ |
|
தலைவனுடன் வந்த நாய்க்குத் தோழி முதலியோர் அஞ்சி வேறிடம் செல்லுதல் |
|
முனை பாழ் படுக்கும் துன் அருந் துப்பின் |
|
பகை புறம் கண்ட பல் வேல் இளைஞரின் |
|
உரவுச் சினம் செருக்கி, துன்னுதொறும் வெகுளும், |
130 |
முளை வாள் எயிற்ற, வள் உகிர், ஞமலி |
|
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர, |
|
நடுங்குவனம் எழுந்து, நல் அடி தளர்ந்து, யாம் |
|
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர |
|
தலைவன் மகளிரிடம் கெடுதி வினாவுதல் |
|
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து |
135 |
ஆ காண் விடையின், அணி பெற வந்து எம் |
|
அலமரல், ஆயிடை, வெரூஉதல் அஞ்சி, |
|
மெல்லிய இனிய மே வரக் கிளந்து, எம் |
|
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, "ஒண் தொடி, |
|
அசை மென் சாயல், அவ் வாங்கு உந்தி, |
140 |
மட மதர் மழைக் கண், இளையீர்! இறந்த |
|
கெடுதியும் உடையேன்" என்றனன் அதன் எதிர் |
|
சொல்லேம்ஆதலின், அல்லாந்து |
|
தலைவன் தலைவியின் சொல்லை எதிர் பார்த்து நிற்றல் |
|
"கலங்கிக் |
|
கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு |
|
சொல்லலும் பழியோ, மெல் இயலீர்?" என, |
145 |
நைவளம் பழுநிய பாலை வல்லோன் |
|
கை கவர் நரம்பின், இம்மென இமிரும் |
|
மாதர் வண்டொடு, சுரும்பு நயந்து இறுத்த, |
|
தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து, |
|
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி, |
150 |
கல்லென் சுற்றக் கடுங் குரல் அவித்து, எம் |
|
சொல்லல் பாணி நின்றனன் ஆக |
|
யானை சினத்துடன் புனத்திற்கு வர, மகளிர் நடுங்கியமை |
|
இருவி வேய்ந்த குறுங் காற் குரம்பை, |
|
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப, |
|
தேம் பிழி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, |
155 |
சேமம் மடிந்த பொழுதின், வாய்மடுத்து, |
|
இரும் புனம் நிழத்தலின், சிறுமை நோனாது, |
|
அரவு உறழ், அம் சிலை கொளீஇ, நோய் மிக்கு, |
|
உரவுச் சின முன்பால் உடல் சினம் செருக்கி, |
|
கணை விடு(பு), புடையூ, கானம் கல்லென, |
160 |
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர, |
|
கார்ப் பெயல் உருமின் பிளிறி, சீர்த் தக |
|
இரும் பிணர்த் தடக் கை இரு நிலம் சேர்த்தி, |
|
சினம் திகழ் கடாஅம் செருக்கி, மரம் கொல்பு, |
|
மையல் வேழம், மடங்கலின், எதிர்தர, |
165 |
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென, |
|
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து, |
|
விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொருந்தி, |
|
சூர் உறு மஞ்ஞையின் நடுங்க |
|
யானையைத் தலைவன் அம்பு எய்து துரத்துதல் |
|
வார் கோல் |
|
உடு உறும் பகழி வாங்கி, கடு விசை, |
170 |
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின், |
|
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர, |
|
புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது, |
|
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் |
|
நீரிலிருந்து எடுத்துத் தலைவன் காப்பாற்றியமை |
|
நெடு வேள் |
|
அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப, |
175 |
திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய |
|
துணை அறை மாலையின், கை பிணி விடேஎம், |
|
நுரையுடைக் கலுழி பாய்தலின், உரவுத் திரை |
|
அடும் கரை வாழையின் நடுங்க, பெருந்தகை |
|
"அம் சில் ஓதி! அசையல்; யாவதும் |
180 |
அஞ்சல், ஓம்பு; நின் அணி நலம் நுகர்கு" என, |
|
மாசு அறு சுடர் நுதல் நீவி, நீடு நினைந்து, |
|
என் முகம் நோக்கி நக்கனன். |
|
தலைவி தலைவனுடன் கூடிய நிலை |
|
அந் நிலை, |
|
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர, |
|
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ |
185 |
ஆகம் அடைய முயங்கலின், அவ் வழி, |
|
பழு மிளகு உக்க பாறை நெடுஞ் சுனை, |
|
முழு முதற் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென, |
|
புள் எறி பிரசமொடு ஈண்டி, பலவின் |
|
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல், |
190 |
நீர் செத்து அயின்ற தோகை, வியல் ஊர்ச் |
|
சாறு கொள் ஆங்கண் விழவுக் களம் நந்தி, |
|
அரிக் கூட்டு இன் இயம் கறங்க, ஆடு மகள் |
|
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல், |
|
வரைஅர மகளிரின் சாஅய், விழைதக, |
195 |
விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள் |
|
தண் கமழ் அலரி தாஅய், நன் பல |
|
வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த |
|
குன்று கெழு நாடன், எம் விழைதரு பெரு விறல், |
|
இருவரும் பகற்பொழுதைப் போக்கிய வகை |
|
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு, |
200 |
"சாறு அயர்ந்தன்ன, மிடாஅச் சொன்றி |
|
வருநர்க்கு வரையா, வள நகர் பொற்ப, |
|
மலரத் திறந்த வாயில் பலர் உண, |
|
பைந் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் |
|
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு |
205 |
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை, |
|
நின்னோடு உண்டலும் புரைவது" என்று, ஆங்கு, |
|
அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை |
|
மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது, |
|
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி, |
210 |
அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து, |
|
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி, |
|
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் |
|
பூ மலி சோலை, அப் பகல் கழிப்பி, |
|
எல்லை செல்ல, ஏழ் ஊர்பு, இறைஞ்சி, |
215 |
பல் கதிர் மண்டிலம், கல் சேர்பு மறைய |
|
மாலைக்காலத்தின் வருகை |
|
மான் கணம் மரமுதல் தெவிட்ட, ஆன் கணம் |
|
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர, |
|
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் |
|
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ, |
220 |
பாம்பு மணி உமிழ, பல் வயின் கோவலர் |
|
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற, |
|
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட, வள மனைப் |
|
பூந் தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி, |
|
அந்தி அந்தணர் அயர, கானவர் |
225 |
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த, |
|
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப, கானம் |
|
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப, |
|
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத் |
|
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ |
230 |
தலைவன் பெயர்ந்த நிலை |
|
"நேர் இறை முன்கை பற்றி, நுமர் தர, |
|
நாடு அறி நல் மணம் அயர்கம்; சில் நாள் |
|
கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!" என, |
|
ஈர நல் மொழி தீரக் கூறி, |
|
துணை புணர் ஏற்றின், எம்மொடு வந்து, |
235 |
துஞ்சா முழவின் மூதூர் வாயில், |
|
உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன். |
|
தலைவன் வரும் வழியின் அருமை நினைந்து, தலைவி கலங்குதல் |
|
அதற் கொண்டு, |
|
அன்றை அன்ன விருப்போடு, என்றும், |
|
இர வரல் மாலையனே; வருதோறும் |
|
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும், |
240 |
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும், |
|
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும், |
|
பெறாஅன்; பெயரினும், முனியல் உறாஅன், |
|
இளமையின் இகந்தன்றும் இலனே; வளமையின் |
|
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே; கொன் ஊர் |
245 |
மாய வரவின் இயல்பு நினைஇ, தேற்றி, |
|
நீர் எறி மலரின் சாஅய், இதழ் சோரா |
|
ஈரிய கலுழும், இவள் பெரு மதர் மழைக்கண்; |
|
ஆகத்து அரிப் பனி உறைப்ப, நாளும், |
|
வலைப் படு மஞ்ஞையின், நலம் செலச் சாஅய், |
250 |
நினைத்தொறும் கலுழுமால், இவளே |
|
இரவில் தலைவன் வரும் வழியின் அருமை |
|
கங்குல், |
|
அளைச் செறி உழுவையும், ஆளியும், உளியமும், |
|
புழற் கோட்டு ஆமான் புகல்வியும், களிறும், |
|
வலியின் தப்பும் வன்கண் வெஞ் சினத்து |
|
உருமும், சூரும், இரை தேர் அரவமும், |
255 |
ஒடுங்கு இருங் குட்டத்து அருஞ் சுழி வழங்கும் |
|
கொடுந் தாள் முதலையும், இடங்கரும் கராமும், |
|
நூழிலும், இழுக்கும், ஊழ் அடி முட்டமும், |
|
பழுவும், பாந்தளும், உளப்படப் பிறவும், |
|
வழுவின் வழாஅ விழுமம், அவர் |
260 |
குழு மலை விடரகம், உடையவால் எனவே.' |
|
இதன் பொருள் |
ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
|
குறிஞ்சிப்பாட்டு முற்றும்
|
தனிப் பாடல்கள் |
|
நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்பு உடையள்; |
|
என் குற்றம் யானும் உணர்கலேன்; - பொன் குற்று |
|
அருவி கொழிக்கும் அணி மலை நாடன் |
|
தெரியுங்கால், தீயது இலன். |
1 |
ஆற்றல் சால் கேள்வி அறம் பொருள் இன்பத்தைப் |
|
போற்றிப் புனைந்த பொருளிற்றே- தேற்ற |
|
மறையோர் மணம் எட்டின் ஐந்தாம் மணத்தின் |
|
குறையாக் குறிஞ்சிக் குணம். |
2
|