காவிரியின் சிறப்பு | |
இதன் பொருள் |
வசை இல் புகழ், வயங்கு வெண்மீன் |
|
திசை திரிந்து தெற்கு ஏகினும், |
|
தற் பாடிய தளி உணவின் |
|
புள் தேம்பப் புயல் மாறி, |
|
வான் பொய்ப்பினும், தான் பொய்யா, |
5 |
மலைத் தலைய கடல் காவிரி |
|
புனல் பரந்து பொன் கொழிக்கும்
| |
சோழ நாட்டின் சிறப்பு
| |
விளைவு அறா வியன் கழனி, |
|
கார்க் கரும்பின் கமழ் ஆலைத் |
|
தீத் தெறுவின், கவின் வாடி, |
10 |
நீர்ச் செறுவின் நீள் நெய்தல் |
|
பூச் சாம்பும் புலத்து ஆங்கண், |
|
காய்ச் செந்நெல் கதிர் அருந்து |
|
மோட்டு எருமை முழுக் குழவி, |
|
கூட்டு நிழல், துயில் வதியும் |
15 |
கோள் தெங்கின், குலை வாழை, |
|
காய்க் கமுகின், கமழ் மஞ்சள், |
|
இன மாவின், இணர்ப் பெண்ணை, |
|
முதல் சேம்பின், முளை இஞ்சி |
|
அகல் நகர் வியல் முற்றத்து, |
20 |
சுடர் நுதல், மட நோக்கின், |
|
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும் |
|
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை, |
|
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும், |
|
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும் |
25 |
விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா, |
|
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து, |
|
குறும் பல் ஊர் நெடுஞ் சோணாட்டு
| |
நகரச் சிறப்பு
| |
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி |
|
நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி, |
30 |
பணை நிலைப் புரவியின், அணை முதல் பிணிக்கும் |
|
கழி சூழ் படப்பை, கலி யாணர்ப், |
|
பொழில் புறவின் பூந்தண்டலை, |
|
மழை நீங்கிய மா விசும்பில் |
|
மதி சேர்ந்த மக வெண் மீன் |
35 |
உரு கெழு திறல் உயர் கோட்டத்து, |
|
முருகு அமர் பூ முரண் கிடக்கை |
|
வரி அணி சுடர், வான் பொய்கை, |
|
இரு காமத்து இணை ஏரி, |
|
புலிப் பொறிப் போர்க் கதவின் |
40 |
திருத் துஞ்சும் திண் காப்பின், |
|
புகழ் நிலைஇய மொழி வளர |
|
அறம் நிலைஇய அகன் அட்டில் |
|
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி |
|
யாறு போலப் பரந்து ஒழுகி, |
45 |
ஏறு பொரச் சேறாகி, |
|
தேர் ஓடத் துகள் கெழுமி, |
|
நீறு ஆடிய களிறு போல, |
|
வேறுபட்ட வினை ஓவத்து |
|
வெண் கோயில் மாசு ஊட்டும்: |
50 |
தண் கேணித் தகை முற்றத்து, |
|
பகட்டு எருத்தின் பல சாலை; |
|
தவப் பள்ளி; தாழ் காவின் |
|
அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் |
|
ஆவுதி நறும் புகை முனைஇ, குயில் தம் |
55 |
மா இரும் பெடையோடு இரியல் போகி, |
|
பூதம் காக்கும் புகல் அருங் கடி நகர், |
|
தூது உண் அம் புறவொடு துச்சில் சேக்கும் |
|
முது மரத்த முரண் களரி;
| |
மக்களின் விளையாட்டுக்கள்
| |
வரி மணல் அகன் திட்டை, |
60 |
இருங் கிளை, இனன் ஒக்கல், |
|
கருந் தொழில், கலி மாக்கள் |
|
கடல் இறவின் சூடு தின்றும், |
|
வயல் ஆமைப் புழுக்கு உண்டும், |
|
வறள் அடும்பின் மலர் மலைந்தும் |
65 |
புனல் ஆம்பல் பூச் சூடியும், |
|
நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் |
|
நாள்மீன் விராஅய கோள்மீன் போல |
|
மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇ, |
|
கையினும் கலத்தினும் மெய் உறத் தீண்டி, |
70 |
பெருஞ் சினத்தால் புறக்கொடாஅது, |
|
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர், |
|
கல் எறியும் கவண் வெரீஇப், |
|
புள் இரியும் புகர்ப் போந்தை; |
|
பறழ்ப் பன்றி, பல் கோழி, |
75 |
உறைக் கிணற்றுப் புறச் சேரி, |
|
மேழகத் தகரொடு சிவல் விளையாட
| |
கடற்கரையில் பகல் விளையாட்டு
| |
கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி,
|
|
நடு கல்லின் அரண் போல, |
|
நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய |
80 |
குறுங் கூரைக் குடி நாப்பண்; |
|
நிலவு அடைந்த இருள் போல, |
|
வலை உணங்கும் மணல் முன்றில்; |
|
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த |
|
வெண் கூதாளத்துத் தண் பூங் கோதையர், |
85 |
சினைச் சுறவின் கோடு நட்டு, |
|
மனைச் சேர்த்திய வல் அணங்கினான், |
|
மடல் தாழை மலர் மலைந்தும்; |
|
பிணர்ப் பெண்ணைப் பிழி மகிழ்ந்தும்; |
|
புன் தலை இரும் பரதவர் |
90 |
பைந் தழை மா மகளிரொடு, |
|
பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது, |
|
உவவு மடிந்து, உண்டு ஆடியும்; |
|
புலவு மணல், பூங் கானல், |
|
மா மலை அணைந்த கொண்மூப் போலவும், |
95 |
தாய் முலை தழுவிய குழவி போலவும், |
|
தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும் |
|
மலி ஓதத்து ஒலி கூடல், |
|
தீது நீங்க, கடல் ஆடியும்; |
|
மாசு போக, புனல் படிந்தும்; |
100 |
அலவன் ஆட்டியும்; உரவுத் திரை உழக்கியும்; |
|
பாவை சூழ்ந்தும்; பல் பொறி மருண்டும்; |
|
அகலாக் காதலொடு பகல் விளையாடி-
| |
இரவில் துயிலும் நிலை
| |
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்,
|
|
பொய்யா மரபின், பூ மலி பெருந் துறை, |
105 |
துணைப் புணர்ந்த மட மங்கையர் |
|
பட்டு நீக்கித் துகில் உடுத்தும், |
|
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும், |
|
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும், |
|
மகளிர் கோதை மைந்தர் மலையவும், |
110 |
நெடுங் கால் மாடத்து, ஒள் எரி நோக்கி, |
|
கொடுந் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும், |
|
பாடல் ஓர்த்தும், நாடகம் நயந்தும், |
|
வெண் நிலவின் பயன் துய்த்தும், |
|
கண் அடைஇய கடைக் கங்குலான், |
115 |
மாஅ காவிரி மணம் கூட்டும் |
|
தூ எக்கர்த் துயில்
மடிந்து
| |
ஏற்றுமதி இறக்குமதி நிகழும் பண்டசாலை முற்றம்
|
|
வால் இணர் மடல் தாழை |
|
வேல் ஆழி வியன் தெருவில், |
|
நல் இறைவன் பொருள் காக்கும் |
120 |
தொல் இசைத் தொழில் மாக்கள், |
|
காய் சினத்த கதிர்ச் செல்வன் |
|
தேர் பூண்ட மாஅ போல, |
|
வைகல்தொறும் அசைவு இன்றி, |
|
உல்கு செயக் குறை படாது |
125 |
வான் முகந்த நீர் மலைப் பொழியவும், |
|
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும், |
|
மாரி பெய்யும் பருவம் போல |
|
நீரினின்றும் நிலத்து ஏற்றவும், |
|
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும், |
130 |
அளந்து அறியாப் பல பண்டம் |
|
வரம்பு அறியாமை வந்து ஈண்டி, |
|
அருங் கடிப் பெருங் காப்பின், |
|
வலியுடை வல் அணங்கின் நோன் |
|
புலி பொறித்து, புறம் போக்கி, |
135 |
மதி நிறைந்த மலி பண்டம் |
|
பொதி மூடைப் போர் ஏறி, |
|
மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன் |
|
வரை ஆடு வருடைத் தோற்றம் போல, |
|
கூர் உகிர் ஞமலிக் கொடுந் தாள் ஏற்றை |
140 |
ஏழகத் தகரோடு உகளும் முன்றில்
| |
மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்
|
|
குறுந் தொடை நெடும் படிக்கால் |
|
கொடுந் திண்ணை, பல் தகைப்பின், |
|
புழை, வாயில், போகு இடைகழி, |
|
மழை தோயும் உயர் மாடத்து |
145 |
சேவடி, செறி குறங்கின், |
|
பாசிழை, பகட்டு அல்குல், |
|
தூசு உடை, துகிர் மேனி, |
|
மயில் இயல், மான் நோக்கின், |
|
கிளி மழலை, மென் சாயலோர் |
150 |
வளி நுழையும் வாய் பொருந்தி, |
|
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் |
|
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன, |
|
செறி தொடி முன்கை கூப்பி, செவ்வேள் |
|
வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய், |
155 |
குழல் அகவ, யாழ் முரல, |
|
முழவு அதிர, முரசு இயம்ப, |
|
விழவு அறா வியல் ஆவணத்து
| |
பலவகைக் கொடிகளின் காட்சி
| |
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய |
|
மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்; |
160 |
வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று |
|
உரு கெழு கரும்பின் ஒண் பூப் போல, |
|
கூழுடைக் கொழு மஞ்சிகை, |
|
தாழுடைத் தண் பணியத்து, |
|
வால் அரிசிப் பலி சிதறி, |
165 |
பாகு உகுத்த, பசு மெழுக்கின், |
|
காழ் ஊன்றிய கவி கிடுகின் |
|
மேல் ஊன்றிய துகில் கொடியும்; |
|
பல் கேள்வித் துறை போகிய |
|
தொல் ஆணை நல் ஆசிரியர் |
170 |
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்; |
|
வெளில் இளக்கும் களிறு போல, |
|
தீம் புகார்த் திரை முன்துறை, |
|
தூங்கு நாவாய், துவன்று இருக்கை, |
|
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; |
175 |
மீன் தடிந்து, விடக்கு அறுத்து, |
|
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில், |
|
மணல் குவைஇ, மலர் சிதறி, |
|
பலர் புகு மனைப் பலிப் புதவின் |
|
நறவு நொடைக் கொடியோடு; |
180 |
பிற பிறவும் நனி விரைஇ, |
|
பல் வேறு உருவின் பதாகை நீழல் |
|
செல் கதிர் நுழையாச் செழு நகர்
வரைப்பின்
| |
வளம் பல நிறைந்த தெருக்கள்
| |
செல்லா நல் இசை அமரர் காப்பின், |
|
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும், |
185 |
காலின் வந்த கருங் கறி மூடையும், |
|
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், |
|
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும், |
|
தென் கடல் முத்தும், குண கடல் துகிரும், |
|
கங்கை வாரியும், காவிரிப் பயனும், |
190 |
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், |
|
அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி, |
|
வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின்
| |
வணிகர்களின் வாழ்க்கை முறை
| |
நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் |
|
ஏமாப்ப இனிது துஞ்சி, |
195 |
கிளை கலித்துப் பகை பேணாது, |
|
வலைஞர் முன்றில் மீன் பிறழவும், |
|
விலைஞர் குரம்பை மா ஈண்டவும், |
|
கொலை கடிந்தும், களவு நீக்கியும், |
|
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், |
200 |
நல் ஆனொடு பகடு ஓம்பியும், |
|
நான் மறையோர் புகழ் பரப்பியும், |
|
பண்ணியம் அட்டியும், பசும் பதம் கொடுத்தும், |
|
புண்ணியம் முட்டாத் தண் நிழல் வாழ்க்கை, |
|
கொடு மேழி நசை உழவர் |
205 |
நெடு நுகத்துப் பகல் போல, |
|
நடுவு நின்ற நல் நெஞ்சினோர், |
|
வடு அஞ்சி, வாய் மொழிந்து, |
|
தமவும் பிறவும் ஒப்ப நாடி, |
|
கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது, |
210 |
பல் பண்டம் பகர்ந்து வீசும், |
|
தொல் கொண்டி, துவன்று இருக்கை
| |
பற்பல மொழி பேசுவோர் உறையும் பட்டினம்
|
|
பல் ஆயமொடு பதி பழகி, |
|
வேறு வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் |
|
சாறு அயர் மூதூர் சென்று தொக்காங்கு, |
215 |
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப் |
|
புலம் பெயர் மாக்கள் கலந்து, இனிது, உறையும், |
|
முட்டாச் சிறப்பின், பட்டினம் பெறினும்
| |
தலைவனது அவல நிலை
| |
வார் இருங் கூந்தல் வயங்குஇழை ஒழிய, |
|
வாரேன்; வாழிய, நெஞ்சே!
| |
திருமாவளவன் அரச உரிமை பெற்ற வகை
|
|
கூர் உகிர்க் |
220 |
கொடுவரிக் குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு, |
|
பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி; |
|
அருங் கரை கவியக் குத்தி, குழி கொன்று, |
|
பெருங் கை யானை பிடி புக்காங்கு, |
|
நுண்ணிதின் உணர நாடி, நண்ணார் |
225 |
செறிவுடைத் திண் காப்பு ஏறி, வாள் கழித்து, |
|
உரு கெழு தாயம் ஊழின் எய்தி
| |
பகைவர்மேல் போருக்கு எழுதல்
| |
பெற்றவை மகிழ்தல் செய்யான், செற்றோர் |
|
கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின், |
|
முடியுடைக் கருந் தலை புரட்டும் முன் தாள், |
230 |
உகிருடை அடிய, ஓங்கு எழில் யானை, |
|
வடி மணிப் புரவியொடு, வயவர், வீழ, |
|
பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்ப, |
|
தூறு இவர் துறுகல் போல, போர் வேட்டு, |
|
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி, |
235 |
பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம் |
|
மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க, |
|
முனை கெடச் சென்று, முன் சமம் முருக்கி, |
|
தலை தவச் சென்று
| |
பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்
| |
தண்பணைஎடுப்பி, |
|
வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி, |
240 |
மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி, |
|
கராஅம் கலித்த கண் அகன் பொய்கை, |
|
கொழுங் கால் புதவமொடு செருந்தி நீடி, |
|
செறுவும் வாவியும், மயங்கி, நீர் அற்று, |
|
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும்; |
245 |
கொண்டி மகளிர், உண்துறை மூழ்கி, |
|
அந்தி மாட்டிய நந்தா விளக்கின், |
|
மலர் அணி மெழுக்கம், ஏறிப் பலர் தொழ, |
|
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில், |
|
பரு நிலை நெடுந் தூண் ஒல்கத் தீண்டி, |
250 |
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்; |
|
அரு விலை நறும் பூத் தூஉய், தெருவில் |
|
முது வாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த |
|
திரி புரி நரம்பின் தீந் தொடை ஓர்க்கும் |
|
பெரு விழாக் கழிந்த, பேஎம் முதிர், மன்றத்து, |
255 |
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி, |
|
அழல் வாய் ஓரி அஞ்சு வரக் கதிர்ப்பவும்; |
|
அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்; |
|
கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ, |
|
பிணம் தின் யாக்கைப் பேய் மகள் துவன்றவும்; |
260 |
கொடுங் கால் மாடத்து நெடுங் கடைத் துவன்றி, |
|
விருந்து உண்டு ஆனாப் பெருஞ் சோற்று அட்டில், |
|
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து, |
|
பைங் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர், |
|
தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ, |
265 |
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட |
|
உணவு இல் வறுங் கூட்டு உள்ளகத்து இருந்து, |
|
வளை வாய்க் கூகை நன் பகல் குழறவும்; |
|
அருங் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய, |
|
பெரு பாழ் செய்தும் அமையான்
| |
திருமாவளவனது ஆற்றல்
| |
'மருங்கு அற |
270 |
மலை அகழ்க்குவனே; கடல் தூர்க்குவனே; |
|
வான் வீழ்க்குவனே; வளி மாற்றுவன்' என, |
|
தான் முன்னிய துறைபோகலின், |
|
பல் ஒளியர் பணிபு ஒடுங்க, |
|
தொல் அருவாளர் தொழில் கேட்ப, |
275 |
வடவர் வாட, குடவர் கூம்ப, |
|
தென்னவன் திறல் கெட, சீறி, மன்னர் |
|
மன் எயில் கதுவும் மதனுடை நோன் தாள், |
|
மாத் தானை மற மொய்ம்பின், |
|
செங் கண்ணால் செயிர்த்து நோக்கி, |
280 |
புன் பொதுவர் வழி பொன்ற, |
|
இருங்கோ வேள் மருங்கு சாய
| |
சோழ நாட்டையும் உறையூரையும் சிறப்புறச் செய்தல்
|
|
காடு கொன்று நாடு ஆக்கி, |
|
குளம் தொட்டு வளம் பெருக்கி, |
|
பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி, |
285 |
கோயிலொடு குடி நிறீஇ, |
|
வாயிலொடு புழை அமைத்து, |
|
ஞாயில்தொறும் புதை நிறீஇ, |
|
பொருவேம் எனப் பெயர் கொடுத்து, |
|
ஒருவேம் எனப் புறக்கொடாது, |
290 |
திரு நிலைஇய பெரு மன் எயில், |
|
மின் ஒளி எறிப்பத் தம் ஒளி மழுங்கி, |
|
விசி பிணி முழவின் வேந்தர் சூடிய |
|
பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால், |
|
பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும், |
295 |
முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும், |
|
செஞ் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண் |
|
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின் |
|
திருமாவளவன்
| |
தலைவன் தலைவியைப் பிரிதற்கு அருமை கூறல்
|
|
தெவ்வர்க்கு ஓக்கிய |
|
வேலினும் வெய்ய, கானம்; அவன் |
300 |
கோலினும் தண்ணிய, தட மென் தோளே! |
|
இதன் பொருள் |
சோழன் கரிகாற் பெருவளத்தானைக்
கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
|
பட்டினப் பாலை முற்றும்.
|
தனிப் பாடல்
| |
முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால் |
இச் சக்கரமே அளந்ததால்- செய்ச் செய் |
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய், புனல் நீர்நாடன் |
கரிகாலன் கால் நெருப்பு உற்று |