முகப்பு |
காயாங் குன்றத்துக் |
371. முல்லை |
காயாங் குன்றத்துக் கொன்றை போல, |
||
மா மலை விடர் அகம் விளங்க மின்னி, |
||
மாயோள் இருந்த தேஎம் நோக்கி, |
||
வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய், |
||
5 |
பெயல் தொடங்கினவே, பெய்யா வானம்: |
|
நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி, |
||
அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர், |
||
குழல் தொடங்கினரே கோவலர்- |
||
தழங்கு குரல் உருமின் கங்குலானே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்றான் பாகற்குச் சொல்லியது.-ஒளவையார்
|