முகப்பு |
செண்பகம் (பித்திகம், பித்திகை) |
97. முல்லை |
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா |
||
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு, |
||
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், |
||
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே; |
||
5 |
அதனினும் கொடியள் தானே, 'மதனின் |
|
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு |
||
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என |
||
வண்டு சூழ் வட்டியள் திரிதரும் |
||
தண்டலை உழவர் தனி மட மகளே. | உரை | |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது.-மாறன் வழுதி
|
314. பாலை |
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; |
||
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை; |
||
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி |
||
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில், |
||
5 |
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் |
|
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக் |
||
கழிவதாக, கங்குல்' என்று |
||
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய- |
||
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி |
||
10 |
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள் |
|
புன் புறா வீழ் பெடைப் பயிரும் |
||
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே! | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.- முப்பேர் நாகனார்
|