முகப்பு |
அண்டர் மகன் குறுவழுதி |
345. நெய்தல் |
இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர் |
||
வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் |
||
தங்கினிர்ஆயின், தவறோ-தகைய |
||
தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல- |
||
தாழை தைஇய தயங்குதிரைக் கொடுங் கழி |
||
இழுமென ஒலிக்கும் ஆங்கண் |
||
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே? |
உரை | |
பகல் வந்து ஒழுகுவானைத் தோழி 'இரா வா' என்றது. - அண்டர் மகன் குறுவழுதி |