நாமலார் மகன் இளங்கண்ணன்

250. பாலை
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு,
இரலை நல் மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அளவை, கால் இயல்
கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.

உரை

தலைமகன் பாகற்கு உரைத்தது. - நாமலார் மகன் இளங்கண்ணன்