நெய்தற்கார்க்கியர்

55. நெய்தல்
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே.

உரை

வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தற் கார்க்கியர்

212. நெய்தல்
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர்
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப,
காண வந்து, நாணப் பெயரும்;
அளிதோ தானே, காமம்;
விளிவதுமன்ற; நோகோ யானே.

உரை

குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தற் கார்க்கியன்