முகப்பு |
நெய்தற்கார்க்கியர் |
55. நெய்தல் |
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப் |
||
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ, |
||
கையற வந்த தைவரல் ஊதையொடு |
||
இன்னா உறையுட்டு ஆகும் |
||
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே. |
உரை | |
வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தற் கார்க்கியர் |
212. நெய்தல் |
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந் தேர் |
||
தெண் கடல் அடை கரைத் தெளிர்மணி ஒலிப்ப, |
||
காண வந்து, நாணப் பெயரும்; |
||
அளிதோ தானே, காமம்; |
||
விளிவதுமன்ற; நோகோ யானே. |
உரை | |
குறை நேர்ந்த தோழி குறை நயப்பக் கூறியது. - நெய்தற் கார்க்கியன் |