முகப்பு |
மதுரை நல்வெள்ளியார் |
365. குறிஞ்சி |
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும் |
||
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே- |
||
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி |
||
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் |
||
மருங்கில் கொண்ட பலவின் |
||
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே. |
உரை | |
'யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.- மதுரை நல்வெள்ளி |