முகப்பு |
எழினி |
80. மருதம் |
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி, |
||
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி, |
||
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது |
||
அஞ்சுவது உடையளாயின், வெம் போர் |
||
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி |
||
முனை ஆன் பெரு நிரை போல, |
||
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே. | உரை | |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார் |