முகப்பு |
கோசர் |
15. பாலை |
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு |
||
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய |
||
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல, |
||
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல் |
||
சேயிலை வெள் வேல் விடலையொடு |
||
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. | உரை | |
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார் |
73. குறிஞ்சி |
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ; |
||
அழியல் வாழி-தோழி!-நன்னன் |
||
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய |
||
ஒன்றுமொழிக் கோசர் போல, |
||
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே. | உரை | |
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர் |