முகப்பு |
அம்ம வாழி தோழி நம்ஊர்ப் |
146. குறிஞ்சி |
அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப் |
||
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?- |
||
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர், |
||
'நன்றுநன்று' என்னும் மாக்களொடு |
||
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே. |
உரை | |
தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, 'வரைவு மறுப்பவோ?' எனக் கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது. - வெள்ளிவீதியார். |