அமர்க்கண் ஆமான்

322. குறிஞ்சி
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே.

உரை

தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன்