முகப்பு |
அமர்க்கண் ஆமான் |
322. குறிஞ்சி |
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி |
||
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து, |
||
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென, |
||
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து, |
||
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு, |
||
மருவின் இனியவும் உளவோ? |
||
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே. |
உரை | |
தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன் |