முகப்பு |
அமிழ்தம் உண்க |
201. குறிஞ்சி |
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி, |
||
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு, |
||
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை |
||
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது |
||
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் |
||
கழை நிவந்து ஓங்கிய சோலை |
||
மலை கெழு நாடனை வரும் என்றோளே! |
உரை | |
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |