முகப்பு |
அரில் பவர்ப்...நீர்நாய் |
364. மருதம் |
அரில் பவர்ப் பிரம்பின் வரி புற நீர்நாய் |
||
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் |
||
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி |
||
எற் புறங்கூறும் என்ப; தெற்றென |
||
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர் |
||
துணங்கை நாளும் வந்தன அவ் வரைக் |
||
கண் பொர, மற்று அதன்கண் அவர் |
||
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே. |
உரை | |
வேறு ஒரு பரத்தை தன்னைப் புறங்கூறினாள் எனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. - ஒளவையார் |