முகப்பு |
இன்றே சென்று வருதும் |
189. பாலை |
இன்றே சென்று வருதும்; நாளைக் |
||
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக, |
||
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி |
||
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப, |
||
கால் இயல் செலவின், மாலை எய்தி, |
||
சில் நிரை வால் வளைக் குறுமகள் |
||
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே. |
உரை | |
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன். |