முகப்பு |
உதுக்காண் அதுவே |
191. முல்லை |
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?- |
||
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம் |
||
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத் |
||
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய |
||
ஏதிலாளர் இவண் வரின், 'போதின் |
||
பொம்மல் ஓதியும் புனையல்; |
||
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. |