முகப்பு |
உள்ளினென் அல்லெனோ |
99. முல்லை |
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி, |
||
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து, |
||
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே? |
||
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை |
||
இறைத்து உணச் சென்று அற்றாங்கு, |
||
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே. |
உரை | |
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். 'எம்மை நினைத்தும் அறிதிரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. - ஒளவையார் |