முகப்பு |
என்னெனப்படுங்கொல் |
194. முல்லை |
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர |
||
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர் |
||
கான மஞ்ஞை கடிய ஏங்கும்; |
||
ஏதில கலந்த இரண்டற்கு என் |
||
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே? |
உரை | |
பருவ வரவின்கண், 'ஆற்றாளாம்', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார். |