முகப்பு |
யாய் ஆகியளே மாஅயோளே |
9. நெய்தல் |
யாய் ஆகியளே மாஅயோளே- |
||
மடை மாண் செப்பில் தமிய வைகிய |
||
பெய்யாப் பூவின் மெய் சாயினளே; |
||
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல் |
||
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும் |
||
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் |
||
தண்ணம் துறைவன் கொடுமை |
||
நம் முன் நாணிக் கரப்பாடும்மே. | உரை | |
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - கயமனார் |