முகப்பு |
வளர்பிறை போல |
289. முல்லை |
வளர்பிறை போல வழிவழிப் பெருகி, |
||
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு |
||
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய், |
||
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும், |
||
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே; |
||
பட்ட மாரி படாஅக்கண்ணும், |
||
அவர் திறத்து இரங்கும் நம்மினும், |
||
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே. | உரை | |
'காலம் கண்டு வேறுபட்டாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், 'கொடியர்' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்'என்று, தலைமகள் சொல்லியது |