முகப்பு |
கவலை கெண்டிய |
233. முல்லை |
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி |
||
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர் |
||
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன |
||
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு |
||
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும் |
||
வரைகோள் அறியாச் சொன்றி, |
||
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே. |
உரை | |
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன் |