முகப்பு |
கான மஞ்ஞை அறை ஈன் |
38. குறிஞ்சி |
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை |
||
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் |
||
குன்ற நாடன் கேண்மை என்றும் |
||
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண் |
||
நீரொடு ஓராங்குத் தணப்ப, |
||
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே. |
உரை | |
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர் |