முகப்பு
குக்கூஎன்றது கோழி
157. மருதம்
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
உரை
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை