முகப்பு |
குன்றக் கூகை |
153. குறிஞ்சி |
குன்றக் கூகை குழறினும், முன்றிற் |
||
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும், |
||
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே, |
||
ஆர் இருட் கங்குல் அவர்வயின் |
||
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே. |
உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர் |