முகப்பு |
கொடியோர் நல்கார் ஆயினும் |
367. மருதம் |
கொடியோர் நல்கார்ஆயினும், யாழ நின் |
||
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர், |
||
உவக்காண்-தோழி!-அவ் வந்திசினே- |
||
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப் |
||
பூசல் ஆயம் புகன்று இழி அருவி |
||
மண்ணுறு மணியின் தோன்றும் |
||
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே. |
உரை | |
வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது;வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம். - மதுரை மருதன் இளநாகன் |