முகப்பு |
சுடர் செல் வானம் |
234. முல்லை |
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து, |
||
எல்லுறு பொழுதின் முல்லை மலரும் |
||
மாலை என்மனார், மயங்கியோரே: |
||
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் |
||
பெரும் புலர் விடியலும் மாலை; |
||
பகலும் மாலை-துணை இலோர்க்கே. |
உரை | |
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன் |