முகப்பு |
சுரம் செல் யானைக் |
169. மருதம் |
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் |
||
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம் |
||
நும்மொடு நக்க வால் வெள் எயிறே: |
||
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல |
||
எமக்கும் பெரும் புலவு ஆகி, |
||
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே. |
உரை | |
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார். |