செல்வார் அல்லர் என்று

43. பாலை
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே;
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே:
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல்அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.

உரை

பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார்