முகப்பு |
ஞாயிறு காணாத |
378. பாலை |
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய, |
||
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய், |
||
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச் |
||
சுடர் வாய் நெடு வேற் காளையொடு |
||
மட மா அரிவை போகிய சுரனே! |
உரை | |
மகள் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார் |