முகப்பு |
திரி மருப்பு எருமை |
279. முல்லை |
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன் |
||
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி, |
||
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் |
||
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ- |
||
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல் |
||
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் |
||
இரும் பல் குன்றம் போகி, |
||
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே? | உரை | |
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார் |