முகப்பு |
தொல் கவின் தொலைந்து |
381. நெய்தல் |
தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாஅய் |
||
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது, |
||
பசலை ஆகி, விளிவதுகொல்லோ- |
||
வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், |
||
பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, |
||
விலங்கு திரை உடைதரும் துறைவனொடு |
||
இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே? | உரை | |
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கலுறும் தோழி தலைமகனைத் இயற்பழித்தது. |