முகப்பு |
நாண் இல மன்ற |
35. மருதம் |
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு, |
||
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன |
||
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ |
||
நுண் உறை அழிதுளி தலைஇய |
||
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே. | உரை | |
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி |