புள்ளும் மாவும்

118. நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை,
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
'வருவீர் உளீரோ?' எனவும்,
வாரார்-தோழி!-நம் காதலோரே.

உரை

வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.- நன்னாகையார்