முகப்பு |
பூவொடு புரையும் கண்ணும் |
226. நெய்தல் |
பூவொடு புரையும் கண்ணும், வேய் என |
||
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என |
||
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும் |
||
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும் |
||
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் |
||
குருகு என மலரும் பெருந் துறை |
||
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே. | உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன் |