முகப்பு |
முளி தயிர் பிசைந்த |
167. முல்லை |
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல், |
||
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ, |
||
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் |
||
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் |
||
'இனிது' எனக் கணவன் உண்டலின், |
||
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே. | உரை | |
கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார் |