முகப்பு |
ஆல் (ஆலம்) |
15. பாலை |
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு |
||
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய |
||
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல, |
||
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல் |
||
சேயிலை வெள் வேல் விடலையொடு |
||
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. |
உரை | |
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார் |