முகப்பு |
வாகை (உழிஞ்சில்) |
7. பாலை |
வில்லோன் காலன கழலே; தொடியோள் |
||
மெல் அடி மேலவும் சிலம்பே; நல்லோர் |
||
யார்கொல்? அளியர்தாமே-ஆரியர் |
||
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி, |
||
வாகை வெண் நெற்று ஒலிக்கும் |
||
வேய் பயில் அழுவம் முன்னியோரே. |
உரை | |
செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது. - பெரும்பதுமனார் |
39. பாலை |
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென, |
||
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் |
||
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம் |
||
முலையிடை முனிநர் சென்ற ஆறே. |
உரை | |
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார் |
347. பாலை |
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல் |
||
குமரி வாகைக் கோலுடை நறு வீ |
||
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும் |
||
கான நீள் இடை, தானும் நம்மொடு |
||
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின், |
||
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே. |
உரை | |
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன் |
369. பாலை |
அத்த வாகை அமலை வால் நெற்று, |
||
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக் |
||
கோடை தூக்கும் கானம் |
||
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே. |
உரை | |
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயில் கீரத்தனார் |