முகப்பு |
அவரை |
82. குறிஞ்சி |
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு, |
||
'அழாஅல்' என்று நம் அழுத கண் துடைப்பார்; |
||
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல் |
||
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால் |
||
கொழுங் கொடி அவரை பூக்கும் |
||
அரும் பனி அற்சிரம் வாராதோரே. |
உரை | |
பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன் |
240. முல்லை |
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் |
||
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் |
||
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி, |
||
வாடை வந்ததன் தலையும், நோய் பொர, |
||
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக் |
||
கடல் ஆழ் கலத்தின் தோன்றி, |
||
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. |
உரை | |
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி. |