முகப்பு |
கரும்புப்பூ |
85. மருதம் |
யாரினும் இனியன்; பேர் அன்பினனே- |
||
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் |
||
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர், |
||
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் |
||
நாறா வெண் பூ கொழுதும் |
||
யாணர் ஊரன் பாணன் வாயே. |
உரை | |
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன் |
149. பாலை |
அளிதோ தானே-நாணே நம்மொடு |
||
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே, |
||
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை |
||
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு, |
||
தாங்கும் அளவைத் தாங்கி, |
||
காமம் நெரிதரக் கைந் நில்லாதே. |
உரை | |
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார் |